Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு

அவுஸ்திரேலிய அணிக்கு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவிக்கவில்லையா?

Misleading
Misleading

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணித்தலைவர் பேட் கம்மின்ஸிடம் (Pat Cummins) கொடுக்காது மேடையை விட்டு உடனே வெளியேறும் விதமான காணொளியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

by Anonymous |

நவம்பர் 20, 2023

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று (19) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கிண்ணத்தை வழங்கினார். அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணித்தலைவர் பேட் கம்மின்ஸிடம் (Pat Cummins) கொடுக்காது மேடையை விட்டு உடனே வெளியேறும் விதமான காணொளியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இந்தக் காணொளியுடன் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையான விமர்சித்தும், அவதூறு கருத்துக்களை பதிவு செய்தும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த காணொளி குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில், இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு கிண்ணத்தை வழங்க வந்த பிரதமர் மோடி, அவுஸ்திரேலிய அணிக்கு வாழ்த்து தெரிவித்து கிண்ணத்தையும் வழங்கி அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பேட் கம்மின்ஸிடம் உலகக்கிண்ணத்தை கொடுக்காது உடனடியாக வெளியேறும் காட்சிகள் அடங்கிய காணொளி போலியானது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#AI generated

வெனிசுலா நிலநடுக்கத்தின் உண்மைத் தன்மையைச் சிதைக்கும் AI மற்றும் பழைய வீடியோக்களின் பின்னணி

ஜூன் 30, 2026

#AI generated

இந்தியா A – இலங்கை A அணிகளுக்கு இடையே மோதல் எனப் பரவும் வீடியோ போலியானது

ஜூன் 17, 2026

#AI generated

18 கொண்டை ஊசி வளைவுகள் பகுதியில் பேருந்து மீது பாறை விழுந்து 8 பேர் பலி என பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது

ஜூன் 15, 2026

#AI generated

‘ராட்சத ஆலங்கட்டி மழை’ பகிரப்படும் வீடியோ போலியானது: AI மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை

மே 28, 2026

Related Content

வெனிசுலா நிலநடுக்கத்தின் உண்மைத் தன்மையைச் சிதைக்கும் AI மற்றும் பழைய வீடியோக்களின் பின்னணி

ஜூன் 30, 2026

இந்தியா A – இலங்கை A அணிகளுக்கு இடையே மோதல் எனப் பரவும் வீடியோ போலியானது

ஜூன் 17, 2026

18 கொண்டை ஊசி வளைவுகள் பகுதியில் பேருந்து மீது பாறை விழுந்து 8 பேர் பலி என பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது

ஜூன் 15, 2026

‘ராட்சத ஆலங்கட்டி மழை’ பகிரப்படும் வீடியோ போலியானது: AI மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை

மே 28, 2026

வடமாகாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 27, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection