Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #AI generated

18 கொண்டை ஊசி வளைவுகள் பகுதியில் பேருந்து மீது பாறை விழுந்து 8 பேர் பலி என பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது

False
False

சமூக வலைத்தளங்களில் பரவும் இது போன்ற பதிவுகளில் உள்ள லிங்குகளை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்ய வேண்டாம்

by Anonymous |

ஜூன் 15, 2026

கண்டி – மஹியங்கனை (A26) வீதியில் அமைந்துள்ள 18 கொண்டை ஊசி வளைவுகள் பகுதியில் பயணித்த பயணிகள் பேருந்து ஒன்றின் மீது பாரிய பாறை ஒன்று விழுந்ததில் பேருந்தின் சாரதி உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்று பேஸ்புக் தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது. இந்த விபத்தின் “நேரடி வீடியோவை” பார்ப்பதற்கு வழங்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுமாறும் அந்தப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில் இது முற்றிலும் AI மூலமாக உருவாக்கப்பட்ட போலியான புகைப்படம் என்பதுடன், எட்டுப்பேர் உயிரிழந்ததாக பகிரப்படும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்பதையும் கண்டறிய முடிந்தது.

ஆய்வு:
இவ்வாறான ஒரு சம்பவம் பதிவாகியிருக்கும் என்றால் அது பிரதான செய்தி சேவைகளில் முக்கிய செய்தியாக வெளியாகியிருக்கும். ஆனால் அவ்வாறான எந்தவித செய்தியும் பிரதான ஊடகங்களில் வெளியாகியிருக்கவில்லை. அத்துடன் இலங்கை பொலிசார், வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) மற்றும் முன்னணி செய்தி நிறுவனங்களின் சமீபத்திய செய்தி அறிக்கைகளை பரிசோதித்ததில், இப்படியான எந்தவொரு விபத்தும் பதிவாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உண்மை கண்டறியும் சோதனை மற்றும் ஆதாரங்கள்

1. டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட புகைப்படம்
இந்த புகைப்படத்தை உன்னிப்பாக அவதானிக்கும் போது, அது கணினி தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. பேருந்தின் இலக்கத்தகடு போலியாக உள்ளது.

2. பேருந்தின் பெயர்பலகையிலும் பிழை காணப்படுகின்றது. AI மூலமாக உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பதை இது தெளிவாக காண்பிக்கின்றது.

3. புகைப்படத்தில் இருக்கும் இந்த பேருந்து அசோக் லேலன்ட் பெருந்தாகும். ஆனால் இந்த புகைப்படத்தில் பேருந்தில் இருக்கும் அசோக் லேலன்ட் லோகோவானத்தை குறித்த நிறுவனத்தில் சாயலில் இல்லாது வேறு மாதிரியாக உள்ளது.

அதேபோல் விபத்து நடந்த இடத்தில் இயற்கை காட்சிகளையும், பேருந்தின் மேல் இருக்கும் பாறையும் எந்தவித தொடர்பும் இல்லாது, செயற்கை தன்மையாக உள்ளது. இவற்றை வைத்து பார்க்கும்போது இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை தெளிவாக உறுதிப்படுத்த முடிகின்றது.

மக்களை ஏமாற்றும் “கிளிக்பைட்” (Clickbait) மோசடித் திட்டம்

இந்தப் பதிவின் உண்மையான நோக்கம் அதன் இறுதி வரியில் மறைந்துள்ளது: “மேலே உள்ள லிங்க் மூலம் நேரடி வீடியோவை பாருங்கள்” என பொதுவாக மோசடி லிங்க் பதிவுகள் பகிரப்படுகின்றன. இது சமூக ஊடகங்களில் மோசடி செய்பவர்கள் (Scammers) பயன்படுத்தும் ஒரு பொதுவான உத்தியாகும். மக்களின் பயம் மற்றும் ஆர்வத்தை தூண்டி, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இவ்வாறான போலி மரணச் செய்திகளை உருவாக்குகிறார்கள். அந்த “வீடியோவை” பார்ப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள லிங்கை யாராவது கிளிக் செய்தால், அது அவர்களை ஆபத்தான மூன்றாம் தரப்பு இணையதளங்களுக்கு அழைத்துச் செல்லும். இதன் மூலம்:

  • உங்கள் சமூக ஊடக கணக்குகளின் கடவுச்சொற்கள் திருடப்படலாம் (Phishing).
  • உங்கள் தொலைபேசி அல்லது கணினியில் ஆபத்தான வைரஸ்கள் (Malware/Spyware) தானாகவே பதிவிறக்கம் ஆகலாம்.
  • மோசடிக்காரர்கள் தங்களின் இணையதள விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு வழிவகுக்கும்.

முடிவுரை
118 கொண்டை ஊசி வளைவுகள் பேருந்து மீது பாறை விழுந்து 8 பேர் உயிரிழந்ததாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது. அந்த புகைப்படம் போலியானது மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள லிங்க் மிகவும் ஆபத்தானது.

எமது மதிப்பீடு: முற்றிலும் பொய்யானது & மோசடி (FALSE & SCAM)

பொதுமக்களுக்கான எச்சரிக்கை: சமூக வலைத்தளங்களில் பரவும் இது போன்ற பதிவுகளில் உள்ள லிங்குகளை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்ய வேண்டாம். மேலும், இவ்வாறான போலிச் செய்திகளைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவேண்டும். இது தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதுடன் உங்களது மற்றும் உங்களைச் சார்ந்தவர்களின் இணையப் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையலாம். நம்பகமான செய்திகளை எப்போதும் உத்தியோகபூர்வ ஊடகங்கள் மூலமாக மட்டுமே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Latest updates

#AI generated

இந்தியா A – இலங்கை A அணிகளுக்கு இடையே மோதல் எனப் பரவும் வீடியோ போலியானது

ஜூன் 17, 2026

#AI generated

‘ராட்சத ஆலங்கட்டி மழை’ பகிரப்படும் வீடியோ போலியானது: AI மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை

மே 28, 2026

#FAKE

வடமாகாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 27, 2026

#explainer

” எல் நினோ” 2026: வதந்திகளும்- உண்மைப் பின்னணியும்

மே 24, 2026

Related Content

இந்தியா A – இலங்கை A அணிகளுக்கு இடையே மோதல் எனப் பரவும் வீடியோ போலியானது

ஜூன் 17, 2026

‘ராட்சத ஆலங்கட்டி மழை’ பகிரப்படும் வீடியோ போலியானது: AI மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை

மே 28, 2026

இலங்கை மத்திய வங்கி புதிய 10,000 ரூபாய் பணத்தாள் வெளியிட்டுள்ளதா?

மே 10, 2026

டிஜிட்டல் யுகத்தின் ஏமாற்று வேலைகள்: மத்திய கிழக்கு போர் குறித்த பொய் செய்திகளின் உண்மை பின்னணி

மார்ச் 30, 2026

பாலம் இடிந்து விழுந்ததாக பகிரப்படும் AI காணொளி : Grok AI-இன் பதில்களிலும் தவறு

பிப்ரவரி 9, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection