Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான வைத்தியர் என பகிரப்படும் போலிப் புகைப்படம்

False
False

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான வைத்தியர் என பகிரப்படும் புகைப்படத்தில் இருப்பவர் வைத்தியர் பிரியா என்பதை factseeker இனால் கண்டறிய முடிந்தது.

by Anonymous |

மார்ச் 12, 2025

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலை விடுதியில் கடந்த திங்கட்கிழமை (10) இரவு பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் பல்வேறு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இந்த மனிதாபிமானமற்ற சம்பவத்தை எதிர்கொண்ட மருத்துவரின் எந்தவொரு தனிப்பட்ட தகவல்களையும் அல்லது புகைப்படங்களையும் வெளியிட வேண்டாம் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் மருத்துவ சங்கங்கள் அனைத்து அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களையும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், ஹிரு கொஷிப் முகநூல் பக்கத்திற்கான பக்க வடிவமைப்பில் ஒரு பெண் மருத்துவரின் புகைப்படத்துடன் இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது. இது குறித்து ஆராய்ந்து பார்த்ததில் இவ்வாறு பகிரப்படும் புகைப்படத்தை பிரகாஷி ஜெயசேகர என்ற கணக்கு மூலம் பகிரப்பட்டுள்ளது.

இந்தப் பதிவை ஆராய்ந்ததில், இவ்வாறு பகிரப்படும் புகைப்படத்தில் இருப்பவர் வைத்தியர் பிரியா என்பதை கண்டறிய முடிந்தது. மேலும் வைத்தியர் பிரியா இது குறித்து தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலும் ஒரு பதிவை இட்டுள்ளார்.அத்துடன் இது குறித்து மேலும் பலரும் முகநூல் பக்கத்தில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

https://www.facebook.com/share/p/1Hf8or2BbL/

மேலும், ஹிரு கொஷிப் பின் உத்தியோகபூர்வ பக்கத்தில் வெளியாகியுள்ளதைப் போன்று பகிரப்படும் குறித்த செய்தி தொடர்பில் ஹிரு கொஷிப் முகநூல் பக்கத்தில் ஆராய்ந்த போதும் அவ்வாறான பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை.இருப்பினும்,வேறொரு கணக்கு மூலம் பகிரப்பட்ட ஒரு பதிவைக் கண்டுபிடிக்க முடிந்தது.

ஆகவே, ஹிரு கொஷிப் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்தியுடன் வைத்தியர் பிரியாவின் புகைப்படத்தை இணைத்து போலியாக தயாரிக்கப்பட்ட செய்தியோன்றே சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#Misleading

மெட்ரோ பேருந்துகளை யாழ்ப்பாணத்திற்கு வழங்காது அரசாங்கம் பாகுபாடு பார்ப்பதாக பகிரப்படும் போலிச்செய்தி:

ஆகஸ்ட் 4, 2026

#false

நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதி குறித்து பரவும் உருக்கமான கதை முற்றிலும் கற்பனையானது

ஜூலை 14, 2026

#AI generated

வெனிசுலா நிலநடுக்கத்தின் உண்மைத் தன்மையைச் சிதைக்கும் AI மற்றும் பழைய வீடியோக்களின் பின்னணி

ஜூன் 30, 2026

#AI generated

இந்தியா A – இலங்கை A அணிகளுக்கு இடையே மோதல் எனப் பரவும் வீடியோ போலியானது

ஜூன் 17, 2026

Related Content

நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதி குறித்து பரவும் உருக்கமான கதை முற்றிலும் கற்பனையானது

ஜூலை 14, 2026

புதிதாக நியமிக்கப்பட்ட ரத்துகல ஆதிவாசித் தலைவர் பல்கலைக்கழக மாணவர் என்ற செய்தி முற்றிலும் தவறானது

மே 14, 2026

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

நடிகர் ரஜித ஹிரான் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்படவில்லை

பிப்ரவரி 1, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection