Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் ரூ. 60,000 ஆல் உயர்த்தப்பட்டதா?

Misleading
Misleading

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரூ. 60,000 சம்பள உயர்வு பெற்றதாகக் கூறப்படும் கூற்றுகள் தவறானவை. அடிப்படைச் சம்பளங்கள் மாற்றமின்றி உள்ளன; சமீபத்திய சம்பள வேறுபாடுகள், சீராக்கப்பட்ட எரிபொருள் படி கணக்கீடுகளையே பிரதிபலிக்கின்றன

by Anonymous |

ஆகஸ்ட் 10, 2026

சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நாடாளுமன்ற அமர்வின் போது, இலங்கை அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்தச் சம்பளத்தை ரூ. 60,000 ஆல் உயர்த்தியுள்ளதாகவும், இதனால் அவர்களின் மொத்த மாதாந்த ஊதியம் ரூ. 484,000 ஆக அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

முடிவு: தவறாக வழிநடத்தக்கூடியது (MISLEADING)

பின்னணி

2026 ஆகஸ்ட் 6 அன்று, சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நாடாளுமன்ற அமர்வின் போது தனது உத்தியோகபூர்வ மாதாந்த சம்பளப் பட்டியலைச் சுட்டிக்காட்டி உரையாற்றிய போது, நாடாளுமன்றத்திலும் சமூக ஊடகங்களிலும் காரசாரமான விவாதிக்க ஆரம்பித்தனர். சபையில்  உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் தனது மாதாந்தச் சம்பளம் சுமார் ரூ. 60,000 ஆல் அதிகரித்து, ரூ. 484,000 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ள அதேவேளை, சாதாரண பொதுத்துறை ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என்று அவர் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்தார்.

பாராளுமன்ற உரை இங்கே : https://www.youtube.com/watch?v=vfSdWyLNJyE

தனது கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் தனது சம்பளப் பட்டியலின் நகலொன்றைப் பதிவேற்றினார். அப்பதிவிலிருந்த ஆவணத்தின்படி, அவரது மாதாந்த எரிபொருள் படி ஒதுக்கீடு 2026 ஜூன் மாதத்திலிருந்த ரூ. 179,000 இல் இருந்து 2026 ஜூலை மாதத்தில் ரூ. 244,000 ஆக அதிகரித்திருந்தது தெரியவந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் அறிக்கையைத் தொடர்ந்து, இந்தக் கூற்று பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் விரைவாகப் பரவியது. பயனர்கள் அவரது நாடாளுமன்ற உரையின் காணொளிக் காட்சிகளையும் சம்பளச் சீட்டின் படங்களையும் பரவலாகப் பகிர்ந்ததால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்மையில் அறிவிக்கப்படாத சம்பள உயர்வு வழங்கப்பட்டதா என்பது குறித்து தீவிரமான இணைய விவாதமும் பரவலான பொதுக் குழப்பமும் ஏற்பட்டது.

அதிகாரப்பூர்வ பதிவுகள் கூறுவது என்ன?

நாடாளுமன்ற ஊதியச் சட்டங்கள் மற்றும் திறைசேரி (Treasury) விதிமுறைகளை ஆய்வு செய்ததில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படைச் சம்பளத்தில் எவ்வித உயர்வும் செய்யப்படவில்லை என்பது வெளிப்படையாகிறது.

1983 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் (சம்பளப் படிகள்) சட்டத்தின் கீழ், அடிப்படை நாடாளுமன்றச் சம்பளம்—உத்தியோகபூர்வமாக ‘உறுப்பினர் படி’ (Member Allowance) எனக் குறிப்பிடப்படும் தொகையானது—மாதத்திற்கு ரூ. 54,285.00 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடிப்படைச் சம்பளத்தில் செய்யப்படும் எந்தவொரு நிரந்தர அதிகரிப்புக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினரால் நிறைவேற்றப்படும் உத்தியோகபூர்வ தீர்மானம் அல்லது பரந்த பொதுத்துறை சம்பளச் சுற்றறிக்கைகளுடன் கூடிய இணக்கம் அவசியமாகும். அத்தகைய சட்டமூலமோ அல்லது தீர்மானமோ நிறைவேற்றப்படவில்லை.

எரிபொருள் படி ஏன் மாறியது?

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் படி முறைமை 2008 ஏப்ரல் 1 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. நிலையான பணத்தொகையை வழங்குவதற்குப் பதிலாக, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டையிலுள்ள நாடாளுமன்றத்திற்கும் அவர்களின் சம்மந்தப்பட்ட தேர்தல் மாவட்டத்திற்கும் இடையிலான தூரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஆட்டோ டீசலின் (லீட்டரில்) நிலையான மாதாந்த ஒதுக்கீடு தீர்மானிக்கப்படுகிறது.

  • கொழும்பு மாவட்டம்: 283.94 லீட்டர்

  • கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்கள்: 355.58 லீட்டர்

  • தொலைவில் உள்ள மாவட்டங்கள் (எ.கா: வன்னி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, பதுளை): 568.76 லீட்டர் வரை

நாடாளுமன்ற உறுப்பினரின் கணக்கில் வைப்பு செய்யப்படும் பணத்தின் மதிப்பு, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளன்றும் அவர்களின் நிலையான டீசல் ஒதுக்கீட்டை அன்றைய சந்தையில் ஒரு லீட்டர் டீசலின் சில்லறை விலையால் பெருக்குவதன் மூலம் கணக்கிடப்படுகிறது.

அவசரகால உச்சவரம்பும் அதை நீக்குதலும்

  • அவசரகால விலை உச்சவரம்பு (ஏப்ரல் 2026): மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து, நிதி அமைச்சச்சு 2026 ஏப்ரல் 2 அன்று 01/2026 இலக்க தேசிய வரவுசெலவுத் திட்ட சுற்றறிக்கையை வெளியிட்டது (அமைச்சரவை தீர்மானம் இல. 26/0616/804/078 இன் படி). இந்தச் சுற்றறிக்கை, சந்தை விலைகள் எவ்வளவு உயர்ந்தபோதிலும், அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் எரிபொருள் படி மீளளிப்புகளை 2026 மார்ச் 1 அன்று நிலவிய எரிபொருள் விலையிலேயே தற்காலிகமாகக் கட்டுப்படுத்தியது (Cap).

  • இயல்பு விலையை மீண்டும் நடைமுறைப்படுத்தல் (ஜூலை 2026): 2026 ஜூன் 30 அன்று எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தைத் தொடர்ந்து, திறைசேரிச் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும 2026 ஜூலை 1 அன்று 01/2026 (1) இலக்க தேசிய வரவுசெலவுத் திட்ட சுற்றறிக்கையை வெளியிட்டார். இந்த வழிகாட்டுதல் தற்காலிக உச்சவரம்பை இரத்து செய்து, அனைத்து பொதுத்துறை திணைக்களங்கள் மற்றும் நாடாளுமன்றம் முழுவதும் எரிபொருள் படிகளைச் சந்தை சில்லறை விலைகளுடன் இணைக்கும் நிலையான சூத்திரத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தியது.

அதிகாரப்பூர்வ தெளிவுபடுத்தல்கள்

இந்த சர்ச்சை குறித்துப் பதிலளித்த பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர மற்றும் நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதேர ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு எதுவும் நடைபெறவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினர்.

நாடாளுமன்றக் கணக்குக் கிளை, 2008 ஆம் ஆண்டின் தூர அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கீட்டு முறைமையை விவரிக்கும் உத்தியோகபூர்வ அறிக்கையை அரசாங்கத் தகவல் திணைக்களத்திற்கு அனுப்பியது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் சம்பளப் பட்டியலில் காணப்பட்ட நிகரக் கொடுப்பனவு மாற்றம், அடிப்படைச் சம்பள உயர்வை அல்லாமல், பொதுத்துறைப் போக்குவரத்துப் படிகளைத் தற்போதைய சந்தை எரிபொருள் விலைக்கு ஏற்ப திறைசேரி சீரமைத்தமையையே காட்டுகிறது என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.

முடிவுரை

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரூ. 60,000 சம்பள உயர்வு வழங்கப்பட்டது என்ற கூற்று தவறாக வழிநடத்தக்கூடியதாகும். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடிப்படைச் சம்பளம் சட்டப்பூர்வமாக ரூ. 54,285.00 ஆகவே நீடிக்கிறது. 2026 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடைப்பட்ட நிகரக் கொடுப்பனவில் காணப்பட்ட ரூ. 65,000 வித்தியாசம் முற்றிலும் தற்காலிக எரிபொருள் விலை உச்சவரம்பு நீக்கப்பட்டதால் ஏற்பட்டதே தவிர வேறில்லை. இது பொதுத்துறை முழுவதும் வழக்கமான தூர அடிப்படையிலான டீசல் படி கணக்கீட்டை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவந்ததன் விளைவாகும்.

Latest updates

#Misleading

மெட்ரோ பேருந்துகளை யாழ்ப்பாணத்திற்கு வழங்காது அரசாங்கம் பாகுபாடு பார்ப்பதாக பகிரப்படும் போலிச்செய்தி:

ஆகஸ்ட் 4, 2026

#false

நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதி குறித்து பரவும் உருக்கமான கதை முற்றிலும் கற்பனையானது

ஜூலை 14, 2026

#AI generated

வெனிசுலா நிலநடுக்கத்தின் உண்மைத் தன்மையைச் சிதைக்கும் AI மற்றும் பழைய வீடியோக்களின் பின்னணி

ஜூன் 30, 2026

#AI generated

இந்தியா A – இலங்கை A அணிகளுக்கு இடையே மோதல் எனப் பரவும் வீடியோ போலியானது

ஜூன் 17, 2026

Related Content

மெட்ரோ பேருந்துகளை யாழ்ப்பாணத்திற்கு வழங்காது அரசாங்கம் பாகுபாடு பார்ப்பதாக பகிரப்படும் போலிச்செய்தி:

ஆகஸ்ட் 4, 2026

வெனிசுலா நிலநடுக்கத்தின் உண்மைத் தன்மையைச் சிதைக்கும் AI மற்றும் பழைய வீடியோக்களின் பின்னணி

ஜூன் 30, 2026

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection