Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

இலங்கையின் நீர்வீழ்ச்சியொன்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கென தவறாக பகிரப்படும் காணொளி

Misleading
Misleading

இந்த சம்பவம் 2024 மே 17 ஆம் திகதி இந்தியாவின் பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு என்பதையும், இது இலங்கையில் நடந்த சம்பவம் அல்ல என்பதையும் factseeker உறுதிப்படுத்துகின்றது

by Anonymous |

ஜூன் 5, 2024

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்துடன் நீர்த் தேக்கங்கள் நிரம்பி வழிவதுடன் மக்களின் அன்றாட வாழ்க்கையும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக இலங்கையில் நீர்வீழ்ச்சியொன்றில் தண்ணர் பெருக்கெடுத்து ஓடுவது போன்ற காணொளியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

இலங்கையில் தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக இந்த காணொளி இலங்கையில் இடம்பெற்ற சம்பவம் என்றே பலரும் கருதி, அதனை பகிர்ந்து வருவதால் அதன் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்தது.

குறித்த காணொளியில் இருக்கும் பொதுமக்கள், அந்தப் பிரதேசம் என்பன குறித்து உன்னிப்பாக அவதானித்ததில் இதில் இருப்பவர்கள் இலங்கையர்கள் அல்ல என்பதையும், இந்த பிரதேசம் இலங்கையில் உள்ளதொன்று அல்ல என்பதையும் கண்டறிய முடிந்தது. எனினும் இந்தக் காணொளியின் துல்லியத்தன்மையை ஆராய்ந்து பார்க்க Google Search any image with Lens மற்றும் InVID மூலம் ஆராய்ந்து பார்த்தபோது இது இந்தியாவில் இடம்பெற்ற சம்பவம் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

இந்தியாவின் தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் உள்ள பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் போது இந்த காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இது குறித்து இந்திய ஊடகங்கள் செய்திகளையும் பிரசுரித்துள்ளன.

ஆகவே, இந்த சம்பவம் 2024 மே 17 ஆம் திகதி இந்தியாவின் பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு என்பதையும், இது இலங்கையில் நடந்த சம்பவம் அல்ல என்பதையும் factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#FAKE

தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு செல்ல இலவச நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுகிறதா?

ஜூன் 25, 2025

#false

அண்டர்டேக்கர் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

ஜூன் 23, 2025

#FAKE

அமெரிக்காவின் B-2 விமானத்தை ஈரான் சுட்டுவீழ்த்தியதாக பகிரப்படும் போலிச்செய்தி

ஜூன் 23, 2025

#FAKE

TEMU இலவசமாக மின்னணு சாதனங்களை வழங்குவதாக பகிரப்படும் போலிச் செய்தி

ஜூன் 20, 2025

Related Content

உள்ளூராட்சி ஆணையாளருக்கு தனது விருப்பத்திற்கேற்ப வாக்கெடுப்பு முறையை தீர்மானிக்க அதிகாரம் உண்டா?

ஜூன் 19, 2025

ஈரான் வான்வழித் தாக்குதல்கள் எனப் பகிரப்படும் பழைய காணொளி

ஜூன் 16, 2025

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

மாலினியின் இறுதிச் சடங்கில் நடிகர்கள் நடனமாடினார்களா?

மே 28, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection