Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு

அநுரகுமார தெரிவித்ததாக போலிச்செய்தி பகிரப்படுகின்றது

Misleading
Misleading

உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாது அநுரகுமாரவின் கருத்து தமிழ் ஊடகங்களின் பரவலாக பகிரப்பட்டுள்ளன.

by Anonymous |

பிப்ரவரி 25, 2024

தமிழர்களுக்கு எதிரான போருக்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கியதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக தெரிவித்ததாக இம்மாதம் 21ஆம் திகதி தினக்குரல் பத்திரிகையில் செய்தியொன்று பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு factseekerஇற்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆகவே இதன் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில், குறித்த செய்தியின் மூலமானது ‘ஒருவன்’ இணையதளத்தில் இருந்து பெறப்பட்டுள்ளதை factseekerஇனால் உறுதிப்படுத்த முடிந்தது.

எனினும் இந்த செய்தியை ‘ஒருவன்’ இணையதளம் முதலில் “தமிழர்களுக்கு எதிரான போருக்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கியது” என்ற தலைப்பில் பிரசுரித்திருந்த போதிலும் பின்னர் அச்செய்தியின் தலைப்பை மாற்றியுள்ளது.

தற்போது அந்த செய்தியின் தலைப்பானது “2005 தேர்தலில் மஹிந்தவை ஆதரித்த ஜே.வி.பி: அனுரகுமார எம்.பி வெளிப்படுத்திய தகவல்” என காணப்படுகின்றது.

https://oruvan.com/sri-lanka/2024/02/20/the-jvp-admitted-that-it-supported-the-election-of-an-anti-tamil-president%20.

எனினும் தினக்குரல் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட செய்தியே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வாவிடம் factseeker வினவியபோது, தலைவர் அநுரகுமாரவினால் அவ்வாறான கருத்துக்கள் பகிரப்படவில்லை எனத் தெரிவித்திருந்தார். அத்துடன் இது குறித்து தேசிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு மறுப்பு அறிவித்தல் ஒன்றையும் விடுத்துள்ளது.

https://web.facebook.com/AnuraKumaraTamil/posts/pfbid02nyth3RK4psCkyrjFJ9nr4zetJKBUWV7zE7r2PfibHsAtqqCYw2KVU7wskfQsNxyfl?_rdc=1&_rdr

 

ஆகவே அநுரகுமார கூறியதாக பகிரப்படும் செய்தி போலியானது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#AI generated

வெனிசுலா நிலநடுக்கத்தின் உண்மைத் தன்மையைச் சிதைக்கும் AI மற்றும் பழைய வீடியோக்களின் பின்னணி

ஜூன் 30, 2026

#AI generated

இந்தியா A – இலங்கை A அணிகளுக்கு இடையே மோதல் எனப் பரவும் வீடியோ போலியானது

ஜூன் 17, 2026

#AI generated

18 கொண்டை ஊசி வளைவுகள் பகுதியில் பேருந்து மீது பாறை விழுந்து 8 பேர் பலி என பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது

ஜூன் 15, 2026

#AI generated

‘ராட்சத ஆலங்கட்டி மழை’ பகிரப்படும் வீடியோ போலியானது: AI மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை

மே 28, 2026

Related Content

வெனிசுலா நிலநடுக்கத்தின் உண்மைத் தன்மையைச் சிதைக்கும் AI மற்றும் பழைய வீடியோக்களின் பின்னணி

ஜூன் 30, 2026

இந்தியா A – இலங்கை A அணிகளுக்கு இடையே மோதல் எனப் பரவும் வீடியோ போலியானது

ஜூன் 17, 2026

18 கொண்டை ஊசி வளைவுகள் பகுதியில் பேருந்து மீது பாறை விழுந்து 8 பேர் பலி என பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது

ஜூன் 15, 2026

‘ராட்சத ஆலங்கட்டி மழை’ பகிரப்படும் வீடியோ போலியானது: AI மூலம் உருவாக்கப்பட்ட கற்பனை

மே 28, 2026

வடமாகாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 27, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection