திமிங்கலத்தின் உயிரைக் காப்பாற்றுவதாகக் கூறப்படும் AI காணொளி

இக் காணொளியை Google AI Detector கருவியின் மூலம் ஆராய்ந்ததில், இது ‘95% AI காணொளி’ என்பது தெரியவந்தது.
by Anonymous |
ஜூன் 20, 2025

தற்போது செயற்கை நுண்ணறிவினால் உருவாக்கப்பட்ட காணொளிகள் பல சமூக வலைதளங்களில் பகிரப்படுவதுடன், அவை பயனர்களை தவறாக வழிநடத்தும் சூழ்நிலைகளையும் உருவாக்குகின்றன.
இந்நிலையில், ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்ட ஒரு பெரிய திமிங்கலத்தை மீட்டு அதன் உயிரைக் காப்பாற்றுவதாகக் கூறப்படும் காணொளி ஒன்று சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
திமிங்கலத்தை மீட்டெடுக்கும் முறையை விளக்கும் குரல் பதிவுடன் கூடிய அக் காணொளி சர்வதேச அளவிலும் சமூகவலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இருப்பினும், இக் காணொளியை ஆராய்ந்ததில், சில தெளிவற்ற அம்சங்கள் பதிவாகியிருப்பதை அவதானிக்க முடிந்தது. உதாரணமாக இக் காணொளியில் உள்ள மனிதர்களின் நடத்தைகள் இயற்கைக்கு முரணாக காணப்பட்டன. மேலும் காணொளியின் தரம் சில இடங்களில் குறைவாக இருந்தது. இதனால் இக் காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்டுத்தி உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதை யூகிக்க முடிந்தது.
இக்காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவையா என Google AI Detector கருவியின் மூலம் ஆராய்ந்ததில், இது ‘95% AI காணொளி’ என்பது தெரியவந்தது.
மேலும், Hive Moderation மூலம் இக் காணொளில் பயன்படுத்தப்பட்டுள்ள குரல் பதிவை ஆராய்ந்த போது, இது 63.3% AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட குரல் பதிவு என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
ஆகவே, சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படும் இந்த காணொளியானது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பதை FactSeeker உறுதிப்படுத்துகின்றது.