கடலுக்கு அடியில் துவாரகா நகரம் காணப்படுவதாக பகிரப்படும் AI காணொளி

Deepware இணையதளத்தின் மூலம் ஆராய்ந்ததில், இது 'AI காணொளி' என்பது தெரியவந்தது.
by Anonymous |
ஏப்ரல் 28, 2025

ஸ்ரீ கிருஷ்ணரின் ஆட்சிக்கால துவாரகா நகரம் கடலுக்கு அடியில் காணப்படுவதை போல காணப்படும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
“ஸ்ரீ கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகை நகரத்தை நாம் அனைவரும் இன்று பார்ப்போம். காலங்கள் கடந்தாலும் அதன் அழகு மாறாமல் உள்ளது” என்ற பதிவுடன் இந்தக் காணொளி பகிரப்பட்டு வருகிறது.. இக் காணொளி சமூகவலைதளங்களில் அதிகளவில் பகிரப்படுகின்ற காரணத்தால், FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.
இக் காணொளியை உன்னித்து அவதானித்த போது காணொளியின் கீழ் பகுதியில் “@mbaiarts” என்ற watermark பயன்படுத்தியிருப்பதை அவதானிக்க முடிந்தது. அந்த பெயரை வைத்து சமுகவலைத்தளங்களில் ஆராய்ந்ததில், “mbaiaret” என்ற Instagram பக்கத்தில் கடந்த 2025 ஏப்ரல் 9ஆம் திகதி இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும், அந்த Instagram பதிவில் இந்தக் காணொளி செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் Deepware இணையதளத்தில் இக் காணொளியை ஆராய்ந்ததில், இக் காணொளி AI மூலம் உருவாக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
ஆகவே, ஸ்ரீ கிருஷ்ணரின் ஆட்சிக்கால துவாரகா நகரம் கடலுக்கு அடியில் காணப்படுவதை போல சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பதை FacrSeeker உறுதிப்படுதுகிறது.