Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

கடன் ஒப்பந்த அடிப்படையிலேயே உலக வங்கி 200 மில்லியன் டொலரை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொண்டது

False
False

இக் கடன் ஒப்பந்தத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நிதியமைச்சின் செயலாளர் K.M. மகிந்த சிறிவர்தன மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லேன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

by Anonymous |

நவம்பர் 13, 2024

உலக வங்கியிடமிருந்து இலங்கை அரசாங்கம் 200 மில்லியன் டொலர் கடனைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அரசாங்கத்திற்கு சர்வதேச அமைப்புகளின் அதிகபட்ச ஆதரவு கிடைத்துள்ளதால் உலக வங்கியால் இந்த நிதி வழங்கப்பட்டதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து சமூக வலைதளங்களில் அதிகளவில் விவாதிக்கப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

https://lankacnews.com/%e0%b6%bd%e0%b7%9d%e0%b6%9a-%e0%b6%b6%e0%b7%90%e0%b6%82%e0%b6%9a%e0%b7%94%e0%b7%80-%e0%b6%85%e0%b6%b4%e0%b7%92-%e0%b6%89%e0%b6%bd%e0%b7%8a%e0%b6%bd%e0%b7%94%e0%b7%80%e0%b7%99%e0%b6%ad%e0%b7%8a/

மேலும், உலக வங்கியிடமிருந்து நாங்கள் கடன்களை பெற்றுக்கொள்ளவில்லை என்றும் இது உதவித்தொகையாக கிடைத்தது என்றும் தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆராய்ந்த போது, இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் மறுசீரமைப்புக் கொள்கைகளுக்கு ஆதரவாக உலக வங்கி குழுமத்தின் சர்வதேச வளர்ச்சி சங்கம் (IDA) மூலம் மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாக அறிய முடிந்தது. இக் கடன் ஒப்பந்தத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நிதியமைச்சின் செயலாளர் K.M. மகிந்த சிறிவர்தன மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லேன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். இவ் வேலைத்திட்டமானது 2023-2024 ஆகிய இரண்டு வருடங்களில் அமுல்படுத்தப்படும் மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட கடன் ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் வழக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, உலக வங்கியும் தனது இணையதளத்தில் முழுமையான விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

https://www.worldbank.org/en/news/press-release/2024/10/07/world-bank-signs-additional-200-million-to-support-sri-lanka-s-economic-reforms#:~:text=World%20Bank%20Signs%20Additional%20%24200%20Million%20to%20Support%20Sri%20Lanka’s%20Economic%20Reforms,-Share%20more&text=COLOMBO%2C%20October%207%2C%202024%20%E2%80%93,(DPO)%20for%20%24200%20million

இலங்கையின் மறுசீரமைப்பு, நிலைப்படுத்தல் மற்றும் பொருளாதாரத்தை சுமூக நிலைக்கு கொண்டு வருவதற்கான (RESET) அபிவிருத்தி கொள்கைகளுக்கு நிதியளிக்கும் (DPF) வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த நிதி உதவி இலங்கைக்கு கிடைத்துள்ளது. இவ் வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் 2023 ஆண்டில் செயற்படுத்தப்பட்டதுடன், பிரதான மூன்று துறைகளின் கீழ் ஏழு வேலைத்திட்டங்கள் முழுமைப்படுத்தப்பட்ட பின்னர், 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும். அவ்வொப்பந்தப் பணிகளை நிறைவேற்றியதன் அடிப்படையில், இரண்டாம் கட்டமாக 200 மில்லியன் டொலர் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில் இத் தொகை கடனாகவே வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.

https://pmd.gov.lk/ta/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA/

பொருளாதார செய்திகளை தெரிவிக்கும் EconomyNext இணையத்திலும், உலக வங்கியால் வழங்கப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் திட்டம் பற்றிய விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.

Sri Lanka inks US$200mn World Bank loan for budget support

ஆகவே, இத் தொகையானது கடனாகவே கிடைக்கபெற்றுள்ளது என்பதையும் இது புதிய அரசாங்கத்தின் கீழ் முதல் தடவையாக கிடைத்த கடன் இல்லை என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

#Misleading

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

#FAKE

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

#FAKE

இலங்கை குறித்து இப்ராஹிம் ட்ரொரே கருத்து தெரிவித்தாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

Related Content

DIALOG இன் இலவச சலுகைகள் என பகிரப்படும் போலிச் செய்தி

ஜூன் 2, 2025

மிஸ்டர் பீன் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 29, 2025

இலங்கையில் மோசமான கொவிட் வைரஸ் பரவுவதாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 21, 2025

ஹயேஷிகா பெர்னாண்டோ தனது சிலைகளை உருவாக்கி விற்பனை செய்கிறார் என பகிரப்படும் போலிச்செய்தி

மே 19, 2025

வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 9, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection