Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு

மனோரி மல்லவ ஆரச்சி பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்டது ஏன்?

Factual
Factual

பிரபல இசையமைப்பாளரான நதீக குருகேவின் மனைவி மனோரி மல்லவ ஆரச்சி, இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகராக இருப்பதனாலே பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொண்டார்

by Anonymous |

அக்டோபர் 28, 2024

இலங்கையின் பிரபல இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான நதீக குருகேவின் மனைவி மனோரி மல்லவ ஆரச்சி இவ்வருட பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்டமை தொடர்பாக சர்ச்சைக்குரிய பதிவுகள் சில சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

அவ்வாறு பகிரப்பட்ட சில பதிவுகள் கீழே உள்ளன :

• https://www.facebook.com/share/p/uxTQXqX9xFg7Y1JE/
•https://www.facebook.com/share/p/13BhbfEtLqhhS4

கடந்த 22ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

அவர் “இந்த நேரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அமைச்சர்கள் இருப்பதாலும் தேர்தல் காலம் காரணமாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவோ அல்லது அமைச்சர்களோ பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க முடியாத காரணத்தாலும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்” என தெரிவித்திருந்தார்.

மேலும், மனோரி மல்லவ ஆரச்சி இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகராக இரண்டு வருடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளதையும் அதற்கு முன்னர் அவர் இருபது வருடங்களுக்கு மேலாக இராஜதந்திர முகவராக கடமையாற்றியதையும் அறிய முடிந்தது. அவரின் LinkedIn கணக்கிலும் அவரது தொழில்சார் தகவல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,

https://www.linkedin.com/in/manorie-mallikaratchy-9934361a/

ஆகவே,பிரபல இசையமைப்பாளரான நதீக குருகேவின் மனைவி மனோரி மல்லவ ஆரச்சி, பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகராக இருப்பதனாலே பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொண்டார் என்பதை Factseeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#FAKE

வடமாகாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 27, 2026

#explainer

” எல் நினோ” 2026: வதந்திகளும்- உண்மைப் பின்னணியும்

மே 24, 2026

#false

புதிதாக நியமிக்கப்பட்ட ரத்துகல ஆதிவாசித் தலைவர் பல்கலைக்கழக மாணவர் என்ற செய்தி முற்றிலும் தவறானது

மே 14, 2026

#AI generated

இலங்கை மத்திய வங்கி புதிய 10,000 ரூபாய் பணத்தாள் வெளியிட்டுள்ளதா?

மே 10, 2026

Related Content

வடமாகாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 27, 2026

” எல் நினோ” 2026: வதந்திகளும்- உண்மைப் பின்னணியும்

மே 24, 2026

புதிதாக நியமிக்கப்பட்ட ரத்துகல ஆதிவாசித் தலைவர் பல்கலைக்கழக மாணவர் என்ற செய்தி முற்றிலும் தவறானது

மே 14, 2026

இலங்கை மத்திய வங்கி புதிய 10,000 ரூபாய் பணத்தாள் வெளியிட்டுள்ளதா?

மே 10, 2026

டிஜிட்டல் யுகத்தின் ஏமாற்று வேலைகள்: மத்திய கிழக்கு போர் குறித்த பொய் செய்திகளின் உண்மை பின்னணி

மார்ச் 30, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection