Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

Misleading
Misleading

இந்த புகைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி அமெரிக்காவின் போர்ட்லன்ட் நகரத்தில் உள்ள அஸ்டோரியா அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற மண்சரிவு சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்

by Anonymous |

ஜூன் 11, 2025

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை factseeker இனால் அவதானிக்க முடிந்தது. இந்த புகைப்படம் tamilmirror ஊடகத்தின் instagram பக்கத்திலும், சில முகப்புத்தக பக்கங்களில் பகிரப்பட்டிருப்பதை அடுத்து இது குறித்து factseeker அவதானம் செலுத்தியது.

 

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என குறிப்பிடப்படும் புகைப்படத்தில் காணப்படும் இயற்கை அம்சங்கள் இலங்கையுடன் பொருத்தமில்லாத காரணத்தினால் குறித்த புகைப்படத்தை Google Lens மூலம் ஆராய்ந்த போது, இந்த புகைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி அமெரிக்காவின் போர்ட்லன்ட் நகரத்தில் உள்ள அஸ்டோரியா அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற மண்சரிவு சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை அறிய முடிந்தது.

link :https://komonews.com/news/local/crews-clean-up-landslide-closed-highway-east-of-astoria-northwestern-oregon-winter-weather-conditions

இந்நிலையில், கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண் சரிவின் போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படத்தை sooriyan news உள்ளிட்ட சில பிரதான ஊடகங்களில் அவதானிக்க முடிந்தது.

புகைப்படங்கள் இங்கே :

ஆகவே, கொத்மலை – பூண்டுலோயா வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் அப் புகைப்படம் தவறானது என்பதையும், இந்த புகைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி அமெரிக்காவின் போர்ட்லன்ட் நகரத்தில் உள்ள அஸ்டோரியா அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற மண்சரிவு சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதையும் factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#Misleading

நுகேகொடை பேரணியில் சாராயபோத்தல்கள் வழங்கப்பட்டதாக பகிரப்படுவது பழைய புகைப்படங்களாகும்

நவம்பர் 24, 2025

#Misleading

20,000 பொலிஸ் அதிகாரிகள் இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளதாக சாமர சம்பத் எம்.பி கூறிய கூற்று தவறானது

நவம்பர் 24, 2025

#AI generated

சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் நடிகை சாய் பல்லவியின் AI புகைப்படங்கள்

செப்டம்பர் 26, 2025

#fasle

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் டீசல் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னவின் கூற்று தவறானது

செப்டம்பர் 9, 2025

Related Content

நுகேகொடை பேரணியில் சாராயபோத்தல்கள் வழங்கப்பட்டதாக பகிரப்படுவது பழைய புகைப்படங்களாகும்

நவம்பர் 24, 2025

20,000 பொலிஸ் அதிகாரிகள் இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளதாக சாமர சம்பத் எம்.பி கூறிய கூற்று தவறானது

நவம்பர் 24, 2025

இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த ஆறு மாதங்களில் 3.7 பில்.டொலர்கள் வருமானத்தை ஈட்டவில்லை

ஆகஸ்ட் 6, 2025

கம்சாட்கா தீவிற்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து பகிரப்படும் தவறான காணொளிகள்

ஜூலை 30, 2025

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection