கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

இந்த புகைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி அமெரிக்காவின் போர்ட்லன்ட் நகரத்தில் உள்ள அஸ்டோரியா அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற மண்சரிவு சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
by Anonymous |
ஜூன் 11, 2025

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை factseeker இனால் அவதானிக்க முடிந்தது. இந்த புகைப்படம் tamilmirror ஊடகத்தின் instagram பக்கத்திலும், சில முகப்புத்தக பக்கங்களில் பகிரப்பட்டிருப்பதை அடுத்து இது குறித்து factseeker அவதானம் செலுத்தியது.
கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என குறிப்பிடப்படும் புகைப்படத்தில் காணப்படும் இயற்கை அம்சங்கள் இலங்கையுடன் பொருத்தமில்லாத காரணத்தினால் குறித்த புகைப்படத்தை Google Lens மூலம் ஆராய்ந்த போது, இந்த புகைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி அமெரிக்காவின் போர்ட்லன்ட் நகரத்தில் உள்ள அஸ்டோரியா அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற மண்சரிவு சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை அறிய முடிந்தது.
இந்நிலையில், கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண் சரிவின் போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படத்தை sooriyan news உள்ளிட்ட சில பிரதான ஊடகங்களில் அவதானிக்க முடிந்தது.
புகைப்படங்கள் இங்கே :
ஆகவே, கொத்மலை – பூண்டுலோயா வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் அப் புகைப்படம் தவறானது என்பதையும், இந்த புகைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி அமெரிக்காவின் போர்ட்லன்ட் நகரத்தில் உள்ள அஸ்டோரியா அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற மண்சரிவு சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதையும் factseeker உறுதிப்படுத்துகின்றது.