Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

தேசிய மக்கள் சக்தியின் உத்தேச அமைச்சரவை என போலிச்செய்தி

Misleading
Misleading

தற்போது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் புகைப்படங்களும் இப்பட்டியலில் உள்ளன.

by Anonymous |

செப்டம்பர் 3, 2024

தேசிய மக்கள் சக்தியின் உத்தேச அமைச்சரவை இதுவென கூறும் 18 பேரின் புகைப்படங்களுடன் பதிவொன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

அப்பதிவில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இவ்வாறான அமைச்சரவையை தான் அமைப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் புகைப்படங்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதுடன், சமூக வலைதளங்களில் இது அதிகளவில் பகிரப்பட்டும் உள்ளது.

ஆகவே இதன் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில், இது போலியாக உருவாக்கப்பட்ட ஒரு புகைப்படம் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

இது தொடர்பான பதிவுகள் தேசிய மக்கள் சக்தியின் உத்தியோகபூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளதா என ஆராய்ந்ததில் அவ்வாறான பதிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை அறிய முடிந்தது.

மேலும், இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் செயற்பாட்டாளர்களான வசந்த சமரசிங்க மற்றும் பிமல் ரத்நாயக்க ஆகியோரிடம் factseeker வினவிய போது, ​​இதுவரையில் அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தற்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதால் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரை ஜனாதிபதியாக்கும் நோக்கில் மாத்திரமே செயற்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் தேசிய பத்திரிகைகளில் இது தொடர்பான செய்திகள் எதுவும் வெளியிடப்பட்டுள்ளதா என ஆராய்ந்ததில் அவ்வாறான செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை அறியமுடிந்தது.

ஆகவே, தேசிய மக்கள் சக்தியின் உத்தேச அமைச்சரவை இதுவென கூறும் புகைப்படத்துடனான பதிவுகள் போலியானவை என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

#Misleading

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

#fakenews

வானிலைத் திணைக்களத்தின் இணையதளத்தில் தெரண செய்தியின் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறும் போலிச்செய்தி

டிசம்பர் 11, 2025

#explainer

வானிலை திணைக்களத்தின் அறிவிப்புகளும் அரசியல் விமர்சனங்களும்

டிசம்பர் 10, 2025

Related Content

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

சிவனொளிபாதமலையில் மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றமை உண்மையே

டிசம்பர் 2, 2025

நுகேகொடை பேரணியில் சாராயபோத்தல்கள் வழங்கப்பட்டதாக பகிரப்படுவது பழைய புகைப்படங்களாகும்

நவம்பர் 24, 2025

20,000 பொலிஸ் அதிகாரிகள் இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளதாக சாமர சம்பத் எம்.பி கூறிய கூற்று தவறானது

நவம்பர் 24, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection