Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #fakenews

‘நான் பிரதமராவேன்’ என ரவி கருணாநாயக்க கூறியதாக போலிச்செய்தி

False
False

இலங்கையின் சிங்கள தேசிய பத்திரிகை ஒன்றின் முதற்பக்க தலையங்கத்தை ஒத்ததாக வடிவமைக்கப்பட்டு அந்த பதிவு பகிரப்பட்டு வருகின்றது.

by Anonymous |

ஆகஸ்ட் 5, 2024

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், தான் பிரதமராக பதவியேற்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவொன்று பகிரப்பட்டு வருகின்றது.

“ரணில் ஜனாதிபதியான பின்னர் நானே பிரதமர் -ரவி கருணாநாயக்க கூறுகிறார்” என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருப்பதுடன், இலங்கையின் சிங்கள தேசிய பத்திரிகை ஒன்றின் முதற்பக்க தலையங்கத்தை ஒத்ததாக வடிவமைக்கப்பட்டு அந்த பதிவு பகிரப்பட்டு வருகின்றது.

ஆகவே, இதன் உண்மைத்தன்மை குறித்து Factseeker ஆராய்ந்தபோது, ​​சமீபகாலமாக சிங்கள பிரதான தேசிய பத்திரிகைகளில் இவ்வாறானதொரு தலைப்புச் செய்தி வெளியாகவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

இது தொடர்பில் Factseeker ரவி கருணாநாயக்கவிடம் வினவியபோது, ​​இவ்வாறான கருத்துக்கள் எதனையும் தான் முன்வைக்கவில்லை, சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்தப் பதிவு போலியானது எனத் தெரிவித்ததுடன், இவ்வாறான போலியான பிரசாரங்களை செய்த தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஆகவே, ரணில் ஜனாதிபதியான பின்னர் நானே பிரதமர் என ரவி கருணாநாயக்க தெரிவித்ததாக  சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் போலியானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#FAKE

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவின் பெயரில் பகிரப்படும் போலிக்கடிதம்

மே 22, 2025

#false

இலங்கையில் மோசமான கொவிட் வைரஸ் பரவுவதாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 21, 2025

#FAKE

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் பெயரில் இயங்கும் போலி facebook பக்கம்

மே 20, 2025

#FAKE

“ஃபேஸ்புக் அறிவிப்பு!” எனும் தலைப்பில் WhatsApp தளத்தில் பகிரப்படும் போலிச் செய்தி

மே 19, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection