Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #TRUE

வாக்குறுதியளிக்கப்பட்டதற்கமைய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வரவு செலவு திட்டத்தில் நிறைவேற்றப்படவில்லை

Partially factual
Partially factual

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வரவு செலவுத் திட்ட உரையில் 35,000 வேலையற்ற பட்டதாரிகள் குறித்து நேரடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.

by Anonymous |

பிப்ரவரி 24, 2025

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற வரவுசெலவு திட்ட விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வேலையற்ற பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும், அதில் 35,000 முதல் 40,000 பேர் வரை தாதியர் மற்றும் குடும்ப சுகாதாரத் துறையில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் கூறினார்.

35,000 பட்டதாரிகளுக்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதாக ஜனாதிபதி தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

30,000 அரசவேலை வெற்றிடங்களை நிரப்புவது வேறு விடயம் என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், 35,000 பட்டதாரிகளுக்கு அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்ற வேண்டும் என்று மேலும் கூறினார்.

இது தொடர்பில் பெரும் விவாதம் எழுந்துள்ளதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்ந்ததில் அதில் 35,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.

இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும் போது, ​​ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களைக் கொண்ட ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பொதுத்துறையில் உள்ள அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்ப 30,000 பேரை ஆட்சேர்ப்பு செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

ஆனால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வரவு செலவுத் திட்ட உரையில் 35,000 வேலையற்ற பட்டதாரிகள் குறித்து நேரடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.

Sinhala

|

Latest updates

#FAKE

தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு செல்ல இலவச நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுகிறதா?

ஜூன் 25, 2025

#false

அண்டர்டேக்கர் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

ஜூன் 23, 2025

#FAKE

அமெரிக்காவின் B-2 விமானத்தை ஈரான் சுட்டுவீழ்த்தியதாக பகிரப்படும் போலிச்செய்தி

ஜூன் 23, 2025

#FAKE

TEMU இலவசமாக மின்னணு சாதனங்களை வழங்குவதாக பகிரப்படும் போலிச் செய்தி

ஜூன் 20, 2025

Related Content

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டதாக?

டிசம்பர் 11, 2024

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection