Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

“Daily Ceylon” இணையதளத்தின் தவறான தலைப்பினால் பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு

Misleading
Misleading

பாராளுமன்றத்தில் எழுந்த இவ்விவாதத்திற்கு Daily Ceylon செய்தித் தளத்தில் வெளியான செய்தியின் தலைப்பே காரணமாகும்.

by Anonymous |

மார்ச் 18, 2025

“குழந்தை திருமணம் அனுமதிக்கப்பட்ட முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை மாற்ற அரசு ஆலோசனை” என ஐக்கிய நாடுகள் சபையிடம் அமைச்சர் சரோஜா போல்ராஜ் கோரிக்கை விடுத்ததாக Daily Ceylon செய்தித் தளத்தில் வெளியான செய்தியின் தலைப்பை மேற்கோள்காட்டி கருத்தொன்றை நேற்று (17) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் உதுமா லெப்பே முன்வைத்திருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சரோஜா போல்ராஜ், தான் ஐக்கிய நாடுகள் சபையில் அவ்வாறு எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை எனவும் Daily Ceylon செய்தித் தளம் தவறான செய்தியை வெளியிட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்ததுடன்,இது குறித்து அந்த இணையதளத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இது குறித்து இன்று (18)நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் அமைச்சர் பிமல் ரத்தநாயக்க மற்றும் பிரதி அமைச்சர் முனீர் முலாபர் ஆகியோரும் தமது கருத்துக்களை தெரிவித்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

இந்நிலையில், இந்த சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பில் FactSeeker ஆராய்ந்து பார்த்தது. அந்தவகையில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் உதுமா லெப்பே தெரிவித்த கருத்து தொடர்பில் அவதானித்த போது, அவர் Daily Ceylon செய்தித் தளத்தில் வெளியான தலைப்பை மேற்கோள்காட்டி பின்வருமாறு கூறியிருந்தார்:

“குழந்தை திருமணம் அனுமதிக்கப்பட்ட முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை மாற்ற அரசு ஆலோசனை” என ஐக்கிய நாடுகள் சபையில் அமைச்சர் சரோஜா போல்ராஜ் கோரிக்கை விடுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது. மற்ற சமூகங்களை விட முஸ்லிம் சமூகத்தில் குறைந்த வீதத்திலேயே குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு இருக்க,’குழந்தை திருமணம் அனுமதிக்கப்பட்ட முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம்’ என்று ஏன் எங்கள் முஸ்லிம் சமூகத்தை குறிக்கின்றீர்கள்? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சரோஜா போல்ராஜ், நான் ஐக்கிய நாடுகள் சபையில் இவ்வாறான கருத்தொன்றை தெரிவிக்கவில்லை, அங்கு “முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் குறித்து, அதன் திருத்தம் குறித்தும் அரசாங்கம் ஆலோசனைகளை நடத்தியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கலாச்சார உரிமைகளுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிப்பதற்கும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பல துறைகளைக் கொண்ட குழுவை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் ” என்பதையே வலியுறுத்தினேன் என்ற விடயத்தை தெரிவித்திருந்தார்.

மேலும் Daily Ceylon செய்தித்தளம் தவறாக வழிநடத்தும் வகையில் செய்தியை பிரசுரித்துள்ளது. ஆகவே இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், Daily Ceylon இணையதளத்தின் ஆசிரியர் பீடமும் இது குறித்து விளக்கம் ஒன்றை பதிவிட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

https://www.facebook.com/watch/?v=1037551734882964&rdid=G223JnwGUxmTi8sA

ஆகவே Daily Ceylon செய்தித் தளத்தில் வெளியான செய்தியை factseeker ஆராய்ந்த போது, ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட அறிக்கையை அடிப்படையாக கொண்டே அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையும் Daily Ceylon செய்தியின் உள்ளடக்கத்தையும் ஒப்பிட்டு பார்த்ததில், Daily Ceylon இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியின் உள்ளடக்கத்தில் எந்தவொரு பிழையும் இல்லை என்பதை அவதானிக்க முடிந்தது.

இருப்பினும், இச் செய்திக்கு இடப்பட்ட தலைப்பே பிழையாக அமைந்துள்ளது. அதாவது அவ்வறிக்கையில் எந்தவொரு இடத்திலும் “குழந்தை திருமணம் அனுமதிக்கப்பட்ட முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம்” என்று அமைச்சர் சரோஜா போல்ராஜ் குறிப்பிடவில்லை. ஆனால், தலைப்பில் “குழந்தை திருமணம் அனுமதிக்கப்பட்ட முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை மாற்ற அரசு ஆலோசனை – அமைச்சர் சரோஜா ஐ.நாடுகள் சபையிடம் உறுதி” என Daily Ceylon பிரசுரித்துள்ள செய்தியின் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தலைப்பை அடிப்படையாக வைத்தே எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் உதுமா லெப்பே அவ்வாறான கருத்தினை முன்வைத்துள்ளார். ஆகவே, பாராளுமன்றத்தில் எழுந்த இவ்விவாதத்திற்கு Daily Ceylon செய்தித் தளத்தில் வெளியான செய்தியின் தலைப்பே காரணம் என்பதையும், அந்த தலைப்பு மக்களை தவறாக வழிநடத்துவதாக அமைந்துள்ளது என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

உள்ளூராட்சி ஆணையாளருக்கு தனது விருப்பத்திற்கேற்ப வாக்கெடுப்பு முறையை தீர்மானிக்க அதிகாரம் உண்டா?

ஜூன் 19, 2025

ஈரான் வான்வழித் தாக்குதல்கள் எனப் பகிரப்படும் பழைய காணொளி

ஜூன் 16, 2025

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection