Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

20,000 பொலிஸ் அதிகாரிகள் இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளதாக சாமர சம்பத் எம்.பி கூறிய கூற்று தவறானது

Misleading
Misleading

இந்த ஆண்டும் 20,000 பொலிஸ் அதிகாரிகள் ஓய்வு பெறவுள்ளதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க சமீபத்தில் கூறிய கூற்று ஆராயப்பட்டு, அதிகாரப்பூர்வ அரசாங்க தரவுகளின் அடிப்படையில் தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

by Anonymous |

நவம்பர் 24, 2025

இந்த ஆண்டும் 20,000 பொலிஸ் அதிகாரிகள் ஓய்வு பெறவுள்ளதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கடந்த 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில், தெரிவித்திருந்தார்.

1987, 88, 89, 90, 91 மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில் பொலிஸ் சேவையில் இணைந்த கடமையாற்றும் 20,000 பொலிஸ் அதிகாரிகள் பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும், எனினும் புதிதாக வெறுமனே அறுநூறுக்கு அண்ணளவான அதிகாரிகளே பயிற்ச்சி பெற்று வருவதாகசவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் சுட்டிக்காட்டினார். தான் கூறிய கருத்து உண்மையா பொய்யா என அமைச்சர் கூறவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 18 ஆம் திகதி பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் செலவினத் தலைப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் போதே அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

எனவே, சாமர சம்பத் தசநாயக்க எம்.பியின் இந்த தரவுகள் மற்றும் கருத்து உண்மையா என்பதை factseeker ஆராய்ந்தது. அதற்கமைய பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சிடம் விசாரணைகளை மேற்கொண்டதில், அமைச்சின் உத்தியோகபூர்வ தரவுகளை பெற்றுக்கொள்ள முடிந்தது.

அமைச்சின் தரவுகளுக்கு அமைய, 2025 முதல் 2030 வரையிலான அடுத்த ஐந்து ஆண்டுகளில் பொலிஸ் சேவை மற்றும் சிறப்பு அதிரடி படையிலிருந்து ஓய்வு பெறுபவர்கள் குறித்த புள்ளிவிவரங்கள் கிடைத்தன.

அந்தப் புள்ளிவிவரங்களின்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் (2030) பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 15,223 மற்றும் சிறப்பு அதிரடி படையிலிருந்து ஓய்வு பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 463 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் பொலிஸ் பாதுகாப்பு உதவியாளர்கள், ஐஜிபிக்கள்,சிரேஷ்ட டிஐஜிக்கள், டிஐஜிக்கள், பெண் டிஐஜிக்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர்கள் பதவிகளில் இருந்து ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை அடங்கும். அதன்படி, 2025 ஆம் ஆண்டில் 2,635 பேரும், 2026 ஆம் ஆண்டில் 2,098 பேரும் காவல் சேவையிலிருந்து ஓய்வு பெற உள்ளனர்.

மேலும், 2025 ஆம் ஆண்டில் 72 காவல்துறை அதிகாரிகளும், 2026 ஆம் ஆண்டில் 45 பேரும் ஓய்வு பெறுவார்கள்.

அதன்படி, இந்த ஆண்டு 20,000 பொலிஸ் அதிகாரிகள் ஓய்வு பெறுவார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்த கருத்து தவறானது என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

நுகேகொடை பேரணியில் சாராயபோத்தல்கள் வழங்கப்பட்டதாக பகிரப்படுவது பழைய புகைப்படங்களாகும்

நவம்பர் 24, 2025

#AI generated

சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் நடிகை சாய் பல்லவியின் AI புகைப்படங்கள்

செப்டம்பர் 26, 2025

#fasle

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் டீசல் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னவின் கூற்று தவறானது

செப்டம்பர் 9, 2025

#AI #fakenews

ஊடகங்களையும் பொதுமக்களையும் தவறாக வழிநடத்தும் ‘ எல்ல – வெல்லவாய’ விபத்து தொடர்பான AI புகைப்படம்

செப்டம்பர் 8, 2025

Related Content

நுகேகொடை பேரணியில் சாராயபோத்தல்கள் வழங்கப்பட்டதாக பகிரப்படுவது பழைய புகைப்படங்களாகும்

நவம்பர் 24, 2025

இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த ஆறு மாதங்களில் 3.7 பில்.டொலர்கள் வருமானத்தை ஈட்டவில்லை

ஆகஸ்ட் 6, 2025

கம்சாட்கா தீவிற்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து பகிரப்படும் தவறான காணொளிகள்

ஜூலை 30, 2025

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

உள்ளூராட்சி ஆணையாளருக்கு தனது விருப்பத்திற்கேற்ப வாக்கெடுப்பு முறையை தீர்மானிக்க அதிகாரம் உண்டா?

ஜூன் 19, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection