Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

Vitz ரக கார்கள் 12 லட்சத்துக்கு தரப்படும் என்று நளீன் ஹெவகே தெரிவித்தாரா?

Misleading
Misleading

2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக Vitz மோட்டார் வாகனங்களும் இறக்குமதி செய்யப்படவில்லை

by Anonymous |

நவம்பர் 6, 2024

“ஒவ்வொரு குடும்பமும் 1.2 மில்லியன் ரூபாய்க்கு Vitz கார் ஒன்றை வாங்கும் பொருளாதார கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவோம்.” என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் நளின் ஹேவகே கூறியதாக பதிவுகள் சில சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

இது தொடர்பில் FactSeeker ஆராய்ந்த போது, நளின் ஹேவகே இது குறித்து கருத்து தெரிவித்த காணொளியையும் அவதானிக்க முடிந்தது.

காணொளி : https://youtu.be/o20Z8pWHnOI

அக் காணொளியில், “ஜப்பானில் உள்ள Vitz மோட்டார் வாகனத்தை 1.2 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்ய முடியும் ஆனால் இறக்குமதிக்கான வரி அதிகமாக விதிக்கும் நிலையே உள்ளது. ஆகவே ஒவ்வொரு குடும்பமும் வாகனம் வாங்கும் நிலைமையை அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் நாம் உருவாக்குவோம்” என்று நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

இதன் படி, “ஒவ்வொரு குடும்பமும் குறைந்த விலையில் Vitz கார் ஒன்றை வாங்கும் பொருளாதார அமைப்பு ஒன்றை உருவாக்குவோம்” என அவர் தெரிவிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

மேலும், இது தொடர்பில் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நிஷாந்த ஏ.வீரசிங்கவிடம் FactSeeker வினவிய போது, 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக Vitz மோட்டார் வாகனங்களும் இறக்குமதி செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

ஆகவே,”ஒவ்வொரு குடும்பமும் 1.2 மில்லியன் ரூபாய்க்கு Vitz கார் ஒன்றை வாங்கும் பொருளாதார அமைப்பு ஒன்றை உருவாக்குவோம்.” என நளின் ஹேவகே தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்ற பதிவுகள் தவறானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

உள்ளூராட்சி ஆணையாளருக்கு தனது விருப்பத்திற்கேற்ப வாக்கெடுப்பு முறையை தீர்மானிக்க அதிகாரம் உண்டா?

ஜூன் 19, 2025

ஈரான் வான்வழித் தாக்குதல்கள் எனப் பகிரப்படும் பழைய காணொளி

ஜூன் 16, 2025

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection