Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

விடுதலை புலிகள் கொடியுடன் உள்ள இளம்பெண்ணின் புகைப்படம் இலங்கையில் எடுக்கப்பட்டதா?

Misleading
Misleading

இப் புகைப்படம் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி பிரான்சில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது

by Anonymous |

நவம்பர் 29, 2024

சமீபத்திய நாட்களில் மாவீரர் தினம் குறித்து பல்வேறு பதிவுகள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விடுதலை புலிகள் அமைப்பின் கொடியுடன் ஒரு இளம்பெண் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின் சின்னங்கள் மற்றும் கொடிகள் என்பவற்றை பயன்படுத்தி நினைவேந்தல்களை நடத்த கூடாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வடக்கில் இடம்பெற்ற நினைவேந்தல் என்ற பதிவுகளுடன் இப் புகைப்படம் சமூகவலைதளங்களில் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

இந்த புகைப்படத்தைப் பதிவேற்றிய FaceBook கணக்கை ஆராய்ந்தபோது, அக் கணக்கில் எந்தவொரு புகைப்படமும் இல்லை என்பதை அறிய முடிந்தது.

https://www.facebook.com/profile.php?id=61569366599756

மேலும், ஆராய்ந்த போது இதே பெயரில் உள்ள ஒரு புதுப்பிக்கப்பட்ட Facebook கண்ணகை அவதானிக்க முடிந்தது. அக்கணக்கில் இப் பெண் பிரான்சில் வசிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.facebook.com/jeanne.ammu

மேலும், அப் பெண்ணின் Instagram மற்றும் TikTok கணக்குகளையும் அவதானிக்க முடிந்தது.

https://www.instagram.com/jeanne.ammu/reels/

@ammu_ranjithkumar

இச் சமூகவலைதள பக்கங்களை ஆராய்ந்ததில் இப் புகைப்படம் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி அன்று பதிவேற்றப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

மே மாதம் பிரான்சில் இடம் பெற்ற இலங்கை தமிழர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் குறித்து ஆராய்ந்ததில் ‘Tamil Guardian’ செய்தி தளத்தில் வெளியாகிய செய்தி ஒன்றை அவதானிக்க முடிந்தது.

https://www.tamilguardian.com/content/french-tamils-commemorate-tamil-genocide-remembrance-day

அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தை Google Map மூலம் ஆராய்ந்ததில் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள இடமும் புகைப்படத்தில் உள்ள இடமும் ஒரே இடம் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
https://bit.ly/4eNtrPj


ஆகவே, விடுதலை புலிகள் அமைப்பின் கொடியுடன் இளம்பெண் எடுத்துக்கொண்ட புகைப்படம் இலங்கையில் எடுக்கப்பட்ட புகைப்படம் இல்லை என்பதையும் அப் புகைப்படம் பிரான்சின் Clichy என்ற இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

#Misleading

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

#FAKE

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

#FAKE

இலங்கை குறித்து இப்ராஹிம் ட்ரொரே கருத்து தெரிவித்தாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

Related Content

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

மாலினியின் இறுதிச் சடங்கில் நடிகர்கள் நடனமாடினார்களா?

மே 28, 2025

வெளிநாட்டு சுற்றுலாப்பயணி தாக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளி கடந்த ஆண்டு பெப்ரவரியில் பதிவானதாகும்

மே 27, 2025

சமூக வலைதளங்களில் பகிரப்படும் புத்தரின் புனித தந்த தாது உண்மையல்ல

ஏப்ரல் 25, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection