Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

வரி விதிப்பு குறித்து மனுஷ நாணயக்கார கூறிய கருத்து முற்றிலும் உண்மையல்ல

Misleading
Misleading

சீனி மற்றும் பருப்பு ஆகிய பொருட்களின் வரிகள் ஒரு வருடத்திற்கு பின் மீண்டும் புதுப்பிக்கப்பட்டவை

by Anonymous |

நவம்பர் 8, 2024

தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, அரசாங்கம் விதித்த வரிகள் குறித்து கருத்து தெரிவித்த காணொளியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்ற நிலையில் அது குறித்து FactSeeker அவதானம் செலுத்தியது.

அக் காணொளியில் மனுஷ நாணயக்கார பின்வருமாறு கருத்து தெரிவித்தார்,

“இந்த அரசாங்கம் வந்தவுடன் வரிகளை குறைப்பதாக தெரிவித்தார்கள் அல்லவா? ஆனால் என்ன செய்தார்கள்? வந்த உடனேயே வெங்காயத்துக்கு வரி விதித்தார்கள். உருளைக்கிழங்கு, பருப்பு, இறால் மற்றும் மாசி ஆகியவற்றுக்கு வரி விதித்தார்கள். இப்போது சீனிக்கும் 50 ருபாய் வரி விதித்துள்ளார்கள். வரிகளை குறைப்பதாக கூறியவர்கள் தான் இன்று அதிக வரிகளை விதித்துள்ளார்கள். என்று அவர் தெரிவித்தார்.

காணொளி : Manusha Nanayakkaara

இது போன்றே மாசி மற்றும் பருப்பு போன்ற பொருட்களின் வரிகள் தொடர்பில் சமூகவலைதளங்களில் பல கருத்துக்கள் பகிரப்பட்டு வந்ததால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

இது குறித்து ஆராய்ந்த போது, நிதி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வரிகள் தொடர்பில் வெளியிட்டிருந்த அறிக்கைகளை அவதானிக்க முடிந்தது.

புதிய அறிக்கை –https://www.treasury.gov.lk/api/file/4e7e4248-8e29-4ee0-8254-84e45380d3b6

பழைய அறிக்கை – https://www.treasury.gov.lk/api/file/4a7629af-034a-4938-b07a-cfdbfd5f2d3a

புதிய அறிக்கை – https://www.treasury.gov.lk/api/file/0bad9fc3-fc71-4f9b-becb-d1a157275054

பழைய அறிக்கை – https://www.treasury.gov.lk/api/file/47a167ad-f3e8-4dd4-83fa-8017dae63242

இவ்வறிக்கையின் படி சீனி மற்றும் பருப்பு ஆகிய பொருட்களின் வரிகள் ஒரு வருடத்திற்கு பின் மீண்டும் புதுப்பிக்கப்பட்டவை என்பதையும் அவை புதிதாக விதிக்கப்பட்ட வரிகள் இல்லை என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.

மேலும், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றுக்கு புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதையும் அறிய முடிந்தது.

இது குறித்த தெளிவை கீழே உள்ள பட்டியலை அவதானிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஆகவே, மனுஷ நாணயக்கார கூறிய அனைத்து பொருள்களுக்கும் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை என்பதையும் சில பொருட்களுக்கு புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

#Misleading

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

#FAKE

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

#FAKE

இலங்கை குறித்து இப்ராஹிம் ட்ரொரே கருத்து தெரிவித்தாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

Related Content

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

மாலினியின் இறுதிச் சடங்கில் நடிகர்கள் நடனமாடினார்களா?

மே 28, 2025

வெளிநாட்டு சுற்றுலாப்பயணி தாக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளி கடந்த ஆண்டு பெப்ரவரியில் பதிவானதாகும்

மே 27, 2025

சமூக வலைதளங்களில் பகிரப்படும் புத்தரின் புனித தந்த தாது உண்மையல்ல

ஏப்ரல் 25, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection