Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

யாழ்ப்பாணத்தின் வானில் ஒளிக்கற்றைகள் தோன்றியதா?

Misleading
Misleading

புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து தெளிவான கருத்து இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

by Anonymous |

நவம்பர் 29, 2024

கடந்த சில நாட்களாக இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பல்வேறு பதிவுகள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வானத்தில் ஒளிக்கற்றைகள் தோன்றியதாக புகைப்படங்கள் சில சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

அவை யாழ்ப்பாணத்தில் தோன்றியதாக பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

இப் புகைப்படங்களை Google Lens மூலம் ஆராய்ந்ததில், இது அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என பகிரப்பட்டிருந்த பல பதிவுகளை அவதானிக்க முடிந்தது.

அரிசோனாவில் இது போன்ற ஒளிக்கற்றைகள் தோன்றியதா என ஆராய்ந்ததில், இது குறித்து இவ்வாண்டு மார்ச் 25 ஆம் திகதி ‘Irishstar’ மற்றும் ‘Dailystar’ ஆகிய தளங்கள் வெளியிட்டுள்ள கட்டுரைகளை அவதானிக்க முடிந்தது.

https://www.irishstar.com/news/us-news/bizarre-ring-shaped-ufos-sky-32435777

https://www.dailystar.co.uk/news/us-news/ring-shaped-ufos-caught-bizarre-32434194

அக் கட்டுரையில் “இப் புகைப்படம் உண்மையானது என அனைவரும் நம்பவில்லை. சிலர் அதை Photoshop மென்பொருளின் மூலம் உருவாக்கப்பட்டதாகவும், கண்ணாடி மூலம் எடுக்கப்பட்டு வெளிச்சத்தின் பிரதிபலனாக நிகழ்ந்ததாகவும் நம்புகின்றனர். இதன் பெயரில், வெளிநாட்டு ஊடகத் தகவல்களின் படி, புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து தெளிவான கருத்து இல்லை.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, இப் புகைப்படங்கள் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இல்லை என்பதையும் இது குறித்து பகிரப்படுகின்ற பதிவுகள் மக்களை தவறாக வழிநடத்தும் பதிவுகள் என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#FAKE

அமெரிக்க தூதரகம் தொடர்பான ‘பொக்ஸ் நியூஸ்’ இன் லோகோவுடன் பகிரப்படும் போலியான செய்தி

மார்ச் 24, 2026

#Misleading

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

#FAKE

ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை குறித்து இந்திய ராணுவத் தளபதி கூறியதாக பரவும் போலி வீடியோ

மார்ச் 11, 2026

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

Related Content

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

சிவனொளிபாதமலையில் மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றமை உண்மையே

டிசம்பர் 2, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection