Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

மாலினியின் இறுதிச் சடங்கில் நடிகர்கள் நடனமாடினார்களா?

Misleading
Misleading

மாலினி பொன்சேகாவின் இல்லத்தில் பாடல்கள் பாடி, நடனமாடுவதாக சமூகவலைதளங்களில் பகிரப்படும் காணொளி கடந்த மே மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் எடுக்கப்பட்ட காணொளி ஆகும்.

by Anonymous |

மே 28, 2025

இலங்கை சினிமாவின் “ராணி” எனப் போற்றப்பட்ட மூத்த கலைஞர் மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியை, அரசாங்க அனுசரணையுடன் கடந்த மே 26ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், அந்த இறுதிக்கிரியையில் கலந்து கொண்ட சில நடிகர்/நடிகைகள் மாலினி பொன்சேகாவின் இல்லத்தில் பாடல்கள் பாடி, நடனமாடுவதாகக் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

இக் காணொளி தொடர்பில் சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளை பகிர்ந்திருந்தனர். சிலர் இது பழைய காணொளியாக இருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த முரண்பாடுகளின் காரணமாக, FactSeeker இதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்தது.

சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், இது “சிகுறு எவித்” என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்த கலைஞர்களுக்காக, அந்தத் தொடரின் தயாரிப்பாளரால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தாக இருக்கலாம் என கூறப்பட்டது. இந்தத் தகவல் பிரபல நடிகை நில்மினி தென்னகோனால் பகிரப்பட்டதாகும்.

மேலும், நடிகை நில்மினி தென்னகோனின் சமூகவலைதள பக்கங்களை ஆராய்ந்ததில், கடந்த மே மாதம் 12 ஆம் திகதி அவரால் பதிவேற்றப்பட்ட காணொளியில் அதே காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அக் காணொளி பதிவில் “சிகுறு எவித்” மற்றும் “சித நிதி நெ” ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்த கலைஞர்களுடன் நடத்தப்பட்ட வெசாக் அன்னதானம் நிகழ்வுக்குப் பின்னரான கொண்டாட்ட காட்சிகள்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆகவே, மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியையில் கலந்து கொண்ட சில நடிகர்கள் மாலினி பொன்சேகாவின் இல்லத்தில் பாடல்கள் பாடி, நடனமாடுவதாக சமூகவலைதளங்களில் பகிரப்படும் காணொளி கடந்த மே மதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் எடுக்கப்பட்ட காணொளி என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#FAKE

அமெரிக்க தூதரகம் தொடர்பான ‘பொக்ஸ் நியூஸ்’ இன் லோகோவுடன் பகிரப்படும் போலியான செய்தி

மார்ச் 24, 2026

#Misleading

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

#FAKE

ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை குறித்து இந்திய ராணுவத் தளபதி கூறியதாக பரவும் போலி வீடியோ

மார்ச் 11, 2026

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

Related Content

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

சிவனொளிபாதமலையில் மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றமை உண்மையே

டிசம்பர் 2, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection