Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

மாலினியின் இறுதிச் சடங்கில் நடிகர்கள் நடனமாடினார்களா?

Misleading
Misleading

மாலினி பொன்சேகாவின் இல்லத்தில் பாடல்கள் பாடி, நடனமாடுவதாக சமூகவலைதளங்களில் பகிரப்படும் காணொளி கடந்த மே மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் எடுக்கப்பட்ட காணொளி ஆகும்.

by Anonymous |

மே 28, 2025

இலங்கை சினிமாவின் “ராணி” எனப் போற்றப்பட்ட மூத்த கலைஞர் மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியை, அரசாங்க அனுசரணையுடன் கடந்த மே 26ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், அந்த இறுதிக்கிரியையில் கலந்து கொண்ட சில நடிகர்/நடிகைகள் மாலினி பொன்சேகாவின் இல்லத்தில் பாடல்கள் பாடி, நடனமாடுவதாகக் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

இக் காணொளி தொடர்பில் சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளை பகிர்ந்திருந்தனர். சிலர் இது பழைய காணொளியாக இருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த முரண்பாடுகளின் காரணமாக, FactSeeker இதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்தது.

சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், இது “சிகுறு எவித்” என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்த கலைஞர்களுக்காக, அந்தத் தொடரின் தயாரிப்பாளரால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தாக இருக்கலாம் என கூறப்பட்டது. இந்தத் தகவல் பிரபல நடிகை நில்மினி தென்னகோனால் பகிரப்பட்டதாகும்.

மேலும், நடிகை நில்மினி தென்னகோனின் சமூகவலைதள பக்கங்களை ஆராய்ந்ததில், கடந்த மே மாதம் 12 ஆம் திகதி அவரால் பதிவேற்றப்பட்ட காணொளியில் அதே காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அக் காணொளி பதிவில் “சிகுறு எவித்” மற்றும் “சித நிதி நெ” ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்த கலைஞர்களுடன் நடத்தப்பட்ட வெசாக் அன்னதானம் நிகழ்வுக்குப் பின்னரான கொண்டாட்ட காட்சிகள்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆகவே, மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியையில் கலந்து கொண்ட சில நடிகர்கள் மாலினி பொன்சேகாவின் இல்லத்தில் பாடல்கள் பாடி, நடனமாடுவதாக சமூகவலைதளங்களில் பகிரப்படும் காணொளி கடந்த மே மதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் எடுக்கப்பட்ட காணொளி என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

உள்ளூராட்சி ஆணையாளருக்கு தனது விருப்பத்திற்கேற்ப வாக்கெடுப்பு முறையை தீர்மானிக்க அதிகாரம் உண்டா?

ஜூன் 19, 2025

ஈரான் வான்வழித் தாக்குதல்கள் எனப் பகிரப்படும் பழைய காணொளி

ஜூன் 16, 2025

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection