மக்கள் விரும்பினால், ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ரணில் தயார் என பகிரப்படுவது பழைய செய்தியாகும்

ஸ்வர்ணவாஹினி நியூஸ் facebook பக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்தியே மீண்டும் பகிரப்படுகின்றது.
by Anonymous |
ஏப்ரல் 24, 2025

“மக்கள் விரும்பினால், ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ரணில் தயாராக உள்ளார்” என ஸ்வர்ணவாஹினி (swarnavahini) தொலைக்காட்சியின் Live at 8 செய்தியில் கூறப்பட்டுள்ளதாக பகிரப்படும் பதிவொன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
எனினும் சுவர்ணவாஹினி தொலைக்காட்சி அதன் செய்தித்தளத்தில் தற்போது Live at 8 என்பதற்குப் பதிலாக Live at srilanka என்றே பயன்படுத்துவதால், இந்தப் பதிவின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க FactSeeker இந்த செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தது.
அந்தவகையில், Google Reverse Image Search மூலமாக இதனை ஆராய்ந்து பார்த்ததில், இந்தப் பதிவு முதன்முதலில் ஸ்வர்ணவாஹினி நியூஸ் facebook பக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதி அன்று வெளியிடப்பட்டதை அவதானிக்க முடிந்தது. இந்தப் பதிவு, போராட்டத்தின் போது போக்குவரத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் ரணில் விக்கிரமசிங்க நடத்திய கலந்துரையாடலின் போது தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் செய்தியாக பிரசுரிக்கப்படிருந்தது.
எனவே,”மக்கள் விரும்பினால், ஒரு இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த ரணில் தயாராக உள்ளார்” என , சுவர்ணவாஹினி Live at 8 செய்தி வெளியிட்டுள்ளதாக பகிரப்பட்ட இந்த பதிவுகள் சமீபத்திய செய்தியல்ல என்பதையும் எவ்வாறான சமூக ஊடகப் பதிவுகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.