Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

பொதுத்தேர்தல் குறித்து ரணில்-சஜித் கலந்துரையாடியதாக பகிரப்படும் தவறான செய்தி

Misleading
Misleading

இப் புகைப்படம், ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 2019 செப்டெம்பர் மாதம் நடைபெற்ற கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

by Anonymous |

செப்டம்பர் 30, 2024

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக கூறும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

பாராளுமன்ற தேர்தல் திகதி வெளியாகியுள்ள நிலையில் இப் புகைப்படம் பகிரப்படுவதால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.

இப் புகைப்படம் குறித்து ஆராய்ந்ததில், இந்த புகைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி அன்று முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படம் என்பதை அறியமுடிந்தது.

https://www.facebook.com/share/Pg6h8rKz68X1WEEg/?mibextid=xfxF2i

மேலும், இப் புகைப்படம், ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 2019 செப்டெம்பர் மாதம் நடைபெற்ற கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதையும் அறிய முடிந்தது.

இது குறித்து Hiru இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதையும் காணக்கூடியதாக இருந்தது : https://shorturl.at/zoyAq

ஆகவே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக கூறும் புகைப்படம், 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

#Misleading

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

#FAKE

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

#FAKE

இலங்கை குறித்து இப்ராஹிம் ட்ரொரே கருத்து தெரிவித்தாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

Related Content

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

மாலினியின் இறுதிச் சடங்கில் நடிகர்கள் நடனமாடினார்களா?

மே 28, 2025

வெளிநாட்டு சுற்றுலாப்பயணி தாக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளி கடந்த ஆண்டு பெப்ரவரியில் பதிவானதாகும்

மே 27, 2025

சமூக வலைதளங்களில் பகிரப்படும் புத்தரின் புனித தந்த தாது உண்மையல்ல

ஏப்ரல் 25, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection