Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

பங்களாதேஷ் போராட்டம் என பகிரப்படும் இலங்கையின் ‘அரகலய’ புகைப்படங்கள்

Misleading
Misleading

இந்தப் புகைப்படங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற 'அரகலய' போராட்டத்தின் போது எடுக்கப்பட்டவையாகும்.

by Anonymous |

ஆகஸ்ட் 6, 2024

பங்களாதேஷ் அரசின் தொழில் கோட்டா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூலை மாதம் அந்நாட்டு மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறியுள்ள நிலையில் பங்களாதேஷில் அமைதியின்மை நிலவுகின்றது.

இந்தப் போராட்டங்களை அடுத்து, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன் டாக்கா அரண்மனையை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளதாகவும், தற்போது அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், அந்நாட்டு மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்கள், காணொளிகள் தற்பொழுது சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

எனினும், கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட ‘அரகலய’ போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் சுற்றிவளைத்த வேளையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்போது பங்களாதேஷ் நாட்டில் ஏற்பட்ட கலவரத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் என அந்நாட்டு ஊடகங்களிலும், Youtube, Facebook கணக்குகள், tiktok, Instagram மற்றும் X பக்கங்களில் வேகமாக பகிரப்படுகின்றன.

எனினும் இவ்வாறு பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்டவை என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#FAKE

அமெரிக்க தூதரகம் தொடர்பான ‘பொக்ஸ் நியூஸ்’ இன் லோகோவுடன் பகிரப்படும் போலியான செய்தி

மார்ச் 24, 2026

#Misleading

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

#FAKE

ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை குறித்து இந்திய ராணுவத் தளபதி கூறியதாக பரவும் போலி வீடியோ

மார்ச் 11, 2026

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

Related Content

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

சிவனொளிபாதமலையில் மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றமை உண்மையே

டிசம்பர் 2, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection