Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

நுகேகொடை பேரணியில் சாராயபோத்தல்கள் வழங்கப்பட்டதாக பகிரப்படுவது பழைய புகைப்படங்களாகும்

Misleading
Misleading

இந்தப் படங்கள் அண்மையில் இடம்பெற்ற நுகேகொடா பேரணியின் போது எடுக்கப்பட்டவை அல்ல என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

by Anonymous |

நவம்பர் 24, 2025

எதிர்க்கட்சிகளின் சில கட்சிகள் இணைந்து கடந்த 21 ஆம் திகதி நுகேகொடையில் பேரணியொன்றை நடத்தியிருந்தனர். இந்த பேரணியின் போது மதுபானம் பகிரப்பட்டதாக தெரிவித்து மதுபான போத்தல்கள் அடங்கிய பெட்டிகளின் பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை FactSeeker அவதானித்தது.

இருப்பினும், இது தொடர்பாக FactSeeker நடத்திய தரவு சரிபார்ப்பில், இந்த புகைப்படங்கள் 21 ஆம் திகதி நுகேகொடை பேரணியின் போது எடுக்கப்பட்டவை அல்ல என்பது கண்டறிய முடிந்தது.

இதே புகைப்படங்கள், கடந்த 2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அரசியல் புரட்சி வேளையில் பொதுமக்களால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. அந்த சந்தர்ப்பத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமான பிராடோ கார் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் வாகனத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் பல புகைப்படங்களில் இந்த புகைப்படமும் பதிவாகியிருந்தது.

இந்த புகைப்படத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி டெய்லிமிரர் ஆங்கில இணையதளம் மற்றும் லங்காதீப சிங்கள இணையதளம் ஆகியன செய்திகளுடன் பிரசுரித்துள்ளன.

இணைப்புகள்

https://x.com/Dailymirror_SL/status/1523632768608919553

ஆகவே , கடந்த 21 ஆம் திகதி நுகேகொடை பேரணிக்கு கொண்டு வரப்பட்ட மதுபானம் என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அரசியல் புரட்சி வேளையில் எடுக்கப்பட்டவை என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#FAKE

அமெரிக்க தூதரகம் தொடர்பான ‘பொக்ஸ் நியூஸ்’ இன் லோகோவுடன் பகிரப்படும் போலியான செய்தி

மார்ச் 24, 2026

#Misleading

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

#FAKE

ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை குறித்து இந்திய ராணுவத் தளபதி கூறியதாக பரவும் போலி வீடியோ

மார்ச் 11, 2026

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

Related Content

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

சிவனொளிபாதமலையில் மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றமை உண்மையே

டிசம்பர் 2, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection