Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

கொழும்பு-புதுக்கடை துப்பாக்கி சூடு தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முன்னாள் கமாண்டோ சிப்பாய் அல்ல

Misleading
Misleading

இந்த சந்தேக நபர் இராணுவ பயிற்சியில் சேர்ந்து, அதிலிருந்து தப்பித்து, பின்னர் சட்டப்பூர்வமாக இராணுவ சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு நபர் ஆவர்.

by Anonymous |

பிப்ரவரி 20, 2025

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முன்னாள் கமாண்டோ சிப்பாய் என்றும் முன்னாள் விசேடப்படை வீரர் என்றும் சில பிரதான ஊடகங்களிலும் சமூகவலைதள பக்கங்களிலும் குறிப்பிடப்பட்டிருந்ததை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

ஊடகங்களில் வெளியிடப்பட்ட இம்முரண்பாடான செய்திகளை அவதானித்த பின்னர் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

இது தொடர்பில்  இலங்கை இராணுவத்திடம் FactSeeker வினவிய போது, இந்த நபர் கமாண்டோ படைப்பிரிவில் ஒரு சிப்பாயாக பயிற்சியில் சேர்ந்தவர் என்றும் பின்னர் அப் பயிற்சியின் போது அவர் தப்பிச் சென்றார் என்றும் தெரிவித்தனர். இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் போது அவர் மீண்டும் இராணுவ படைப்பிரிவில் சேர்ந்து, பின்னர் சட்டப்பூர்வமாக அதிலிருந்து விலகினார் என்று மேலும் தெரிவித்தனர்.

இதன் மூலம்,  இந்த சந்தேக நபர் இராணுவ பயிற்சியில் சேர்ந்து, அதிலிருந்து தப்பித்து, பின்னர் சட்டப்பூர்வமாக இராணுவ சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு நபர் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.

ஆகவே, சமூக ஊடகங்களிலும், பிரதான ஊடகங்களிலும் தெரிவிக்கப்பட்டது போல், இந்த சந்தேக நபர் முன்னாள் கமாண்டோ சிப்பாய் அல்ல என்பதையும், அவ்வாறு வெளியிடப்பட்ட செய்திகள் தவறானவை என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#FAKE

நடிகர் விஜய்யின் படங்களை இலங்கையில் வெளியிட ஜனாதிபதி அநுர தடை விதிக்கவில்லை

ஆகஸ்ட் 28, 2025

#false

ஜனாதிபதி அநுரவின் ஜெர்மனி விஜயம் தனிப்பட்ட விஜயமா ?

ஆகஸ்ட் 27, 2025

#false

நீதிபதி நிலுபுலி லங்காபுர, தயா லங்காபுரவின் மகள் அல்ல.

ஆகஸ்ட் 25, 2025

#FAKE

ஜெசிக்கா ராட்கிளிப் என்ற கடல் பயிற்சியாளரை ஒர்கா (Orca) திமிங்கலம் கொன்றதாக பகிரப்படும் AI காணொளி

ஆகஸ்ட் 14, 2025

Related Content

இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த ஆறு மாதங்களில் 3.7 பில்.டொலர்கள் வருமானத்தை ஈட்டவில்லை

ஆகஸ்ட் 6, 2025

கம்சாட்கா தீவிற்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து பகிரப்படும் தவறான காணொளிகள்

ஜூலை 30, 2025

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

உள்ளூராட்சி ஆணையாளருக்கு தனது விருப்பத்திற்கேற்ப வாக்கெடுப்பு முறையை தீர்மானிக்க அதிகாரம் உண்டா?

ஜூன் 19, 2025

ஈரான் வான்வழித் தாக்குதல்கள் எனப் பகிரப்படும் பழைய காணொளி

ஜூன் 16, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection