Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

இலங்கையில் புதிய நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டதாக பகிரப்படும் போலிச்செய்தி

Misleading
Misleading

இலங்கையில் புதிதாக அச்சிடப்பட்ட நாணயத்தாள்கள் என பகிரப்படுகின்ற புகைப்படம், 2011 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணயத்தாள்கள் வைக்கப்பட்ட கோப்புறைகளின் (Folder) புகைப்படமாகும்.

by Anonymous |

ஜனவரி 17, 2025

இலங்கையில் புதிதாக அச்சிடப்பட்ட நாணயத்தாள்கள் என்ற பதிவுடன் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

அப் புகைப்படம் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

இலங்கையில் புதிதாக அச்சிடப்பட்ட நாணயத்தாள்கள் என்ற பதிவுடன் பகிரப்பட்ட அப் புகைப்படத்தை Google Reverse Image மூலம் ஆராய்ந்ததில் பல்வேறு இணையதளங்களில் இப் புகைப்படம் பதிவிட்டு இருப்பதை அவதானிக்க முடிந்தது. மேலும், இவை இலங்கை நாணயத்தாளின் உத்தியோகபூர்வ கோப்புறை (Folder) என குறிப்பிடப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிந்தது.

இது குறித்து இலங்கை மத்திய வங்கியின் நாணயத் திணைக்களத்திடம் FactSeeker வினவிய போது, இவை 2011 ஆம் ஆண்டு மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட உத்தியோகப்பூர்வ நாணயத்தாள்கள் வைக்கப்பட்ட கோப்புறைகள் (Folder) என்றும் இந் நாணயத்தாள் கோப்புகளை இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார வரலாற்று அருங்காட்சியகத்தில் கொள்வனவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர். மேலும், 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட இலங்கையின் 11வது வர்த்தக நாணயத்தாள்கள் வைக்கப்பட்ட கோப்புறைகளே (Folder) இவ்வாறு பகிரப்படுகின்றன என்றும் தெரிவித்தனர்.

ஆகவே, இலங்கையில் புதிதாக அச்சிடப்பட்ட நாணயத்தாள்கள் என்ற பதிவுடன் சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற புகைப்படம் 2011 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணயத்தாள்கள் வைக்கப்பட்ட கோப்புறைகளின் (Folder) புகைப்படம் என்பதையும் அப் பதிவுகள் உண்மைக்கு புறம்பானவை என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

நுகேகொடை பேரணியில் சாராயபோத்தல்கள் வழங்கப்பட்டதாக பகிரப்படுவது பழைய புகைப்படங்களாகும்

நவம்பர் 24, 2025

#Misleading

20,000 பொலிஸ் அதிகாரிகள் இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளதாக சாமர சம்பத் எம்.பி கூறிய கூற்று தவறானது

நவம்பர் 24, 2025

#AI generated

சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் நடிகை சாய் பல்லவியின் AI புகைப்படங்கள்

செப்டம்பர் 26, 2025

#fasle

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் டீசல் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னவின் கூற்று தவறானது

செப்டம்பர் 9, 2025

Related Content

நுகேகொடை பேரணியில் சாராயபோத்தல்கள் வழங்கப்பட்டதாக பகிரப்படுவது பழைய புகைப்படங்களாகும்

நவம்பர் 24, 2025

20,000 பொலிஸ் அதிகாரிகள் இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளதாக சாமர சம்பத் எம்.பி கூறிய கூற்று தவறானது

நவம்பர் 24, 2025

இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த ஆறு மாதங்களில் 3.7 பில்.டொலர்கள் வருமானத்தை ஈட்டவில்லை

ஆகஸ்ட் 6, 2025

கம்சாட்கா தீவிற்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து பகிரப்படும் தவறான காணொளிகள்

ஜூலை 30, 2025

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection