Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

இலங்கையின் நீர்வீழ்ச்சியொன்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கென தவறாக பகிரப்படும் காணொளி

Misleading
Misleading

இந்த சம்பவம் 2024 மே 17 ஆம் திகதி இந்தியாவின் பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு என்பதையும், இது இலங்கையில் நடந்த சம்பவம் அல்ல என்பதையும் factseeker உறுதிப்படுத்துகின்றது

by Anonymous |

ஜூன் 5, 2024

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்துடன் நீர்த் தேக்கங்கள் நிரம்பி வழிவதுடன் மக்களின் அன்றாட வாழ்க்கையும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக இலங்கையில் நீர்வீழ்ச்சியொன்றில் தண்ணர் பெருக்கெடுத்து ஓடுவது போன்ற காணொளியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

இலங்கையில் தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக இந்த காணொளி இலங்கையில் இடம்பெற்ற சம்பவம் என்றே பலரும் கருதி, அதனை பகிர்ந்து வருவதால் அதன் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்தது.

குறித்த காணொளியில் இருக்கும் பொதுமக்கள், அந்தப் பிரதேசம் என்பன குறித்து உன்னிப்பாக அவதானித்ததில் இதில் இருப்பவர்கள் இலங்கையர்கள் அல்ல என்பதையும், இந்த பிரதேசம் இலங்கையில் உள்ளதொன்று அல்ல என்பதையும் கண்டறிய முடிந்தது. எனினும் இந்தக் காணொளியின் துல்லியத்தன்மையை ஆராய்ந்து பார்க்க Google Search any image with Lens மற்றும் InVID மூலம் ஆராய்ந்து பார்த்தபோது இது இந்தியாவில் இடம்பெற்ற சம்பவம் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

இந்தியாவின் தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் உள்ள பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் போது இந்த காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இது குறித்து இந்திய ஊடகங்கள் செய்திகளையும் பிரசுரித்துள்ளன.

ஆகவே, இந்த சம்பவம் 2024 மே 17 ஆம் திகதி இந்தியாவின் பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு என்பதையும், இது இலங்கையில் நடந்த சம்பவம் அல்ல என்பதையும் factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#false

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

#FAKE

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

#AI generated

பாலம் இடிந்து விழுந்ததாக பகிரப்படும் AI காணொளி : Grok AI-இன் பதில்களிலும் தவறு

பிப்ரவரி 9, 2026

#false

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

Related Content

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

சிவனொளிபாதமலையில் மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றமை உண்மையே

டிசம்பர் 2, 2025

நுகேகொடை பேரணியில் சாராயபோத்தல்கள் வழங்கப்பட்டதாக பகிரப்படுவது பழைய புகைப்படங்களாகும்

நவம்பர் 24, 2025

20,000 பொலிஸ் அதிகாரிகள் இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளதாக சாமர சம்பத் எம்.பி கூறிய கூற்று தவறானது

நவம்பர் 24, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection