Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

இறந்த குழந்தை தொலைபேசியில் குறுஞ்செய்தி பார்ப்பதாக பரவும் போலிச்செய்தி

Misleading
Misleading

இந்தப் புகைப்படம் 2022ஆம் ஆண்டில் தாய்லாந்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

by Anonymous |

ஜூன் 20, 2024

‘ காஸாவில் இறந்த குழந்தை கையடக்கத் தொலைபேசியில் குறுஞ்செய்தியை பார்க்கும் காட்சி’ என புகைப்படத்துடன் கூடிய செய்தியொன்று எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வருவதை factseekerஇனால் அவதானிக்க முடிந்தது.

கடந்த ஆண்டு இஸ்ரேல் இராணுவத்திற்கும் பாலஸ்தீன போராளிகளுக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் இன்றுவரை நீடித்து வருகின்ற நிலையில், காஸா பகுதியில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த ஒரு புகைப்படத்தை பலரும் விமர்சித்து வருகின்ற நிலையில், இதன் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்தது.

அதற்கமைய, குறித்த புகைப்படத்தை google reverse image search மூலமாக ஆராய்ந்து பார்த்ததில் இது கடந்த 2022 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை கண்டறிய முடிந்தது. அந்த ஆண்டில் இருந்தே பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

மேலும், இந்த புகைப்படத்தை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த Surattana Sawadkit என்பவர் கடந்த 2022ஆம் ஆண்டு தனது முகப்புத்தக பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி, ஹாலோவீன் (Halloween) மற்றும் சென்ட்ரல் கோரட் (Central Korat) போன்ற குறியீடுகளுடன் இந்தப்பதிவு காணப்படுகின்றது.

முடிவு:

ஆகவே, இந்த புகைப்படத்தையே தற்போது பலரும் காஸாவில் இறந்த குழந்தை தொலைபேசி பயன்படுத்தும் காட்சி எனக்கூறி பகிர்ந்து வருகின்றனர். எனினும் இந்தப் புகைப்படம் 2022ஆம் ஆண்டில் தாய்லாந்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

 

 

 

Latest updates

#false

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

#FAKE

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

#AI generated

பாலம் இடிந்து விழுந்ததாக பகிரப்படும் AI காணொளி : Grok AI-இன் பதில்களிலும் தவறு

பிப்ரவரி 9, 2026

#false

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

Related Content

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

சிவனொளிபாதமலையில் மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றமை உண்மையே

டிசம்பர் 2, 2025

நுகேகொடை பேரணியில் சாராயபோத்தல்கள் வழங்கப்பட்டதாக பகிரப்படுவது பழைய புகைப்படங்களாகும்

நவம்பர் 24, 2025

20,000 பொலிஸ் அதிகாரிகள் இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளதாக சாமர சம்பத் எம்.பி கூறிய கூற்று தவறானது

நவம்பர் 24, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection