Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

ஆனந்தா கல்லூரிக்கு பிரதமர் ஹரிணி சென்றதற்கான காரணம் என்ன?

Misleading
Misleading

396 தேசிய பாடசாலைகளின் அதிபர்களை சந்திப்பதற்கு கல்வி அமைச்சில் போதிய இடமில்லாத காரணத்தினால் ஆனந்தா கல்லூரியின் குலரத்ன மண்டபம் தெரிவு செய்யப்பட்டது.

by Anonymous |

அக்டோபர் 4, 2024

இலங்கையின் புதிய பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டமை குறித்து விமர்சிக்கும் பதிவுகள் சில சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

“பாடசாலை விழாக்களுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை தவிர்க்குமாறு” ஹரிணி அமரசூரிய தெரிவித்ததை மேற்கோள்காட்டி விமர்சனங்கள் எழுந்துள்ளதால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்த கருத்து தொடர்பில் ஆராய்ந்ததில் இவர் இருமுறை இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்துள்ளார் என்பதை அறிய முடிந்தது.

“அரசாங்கம், பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கட்டப்படும் கட்டிடங்களையோ அல்லது எதனையும் மீளத் திறக்க அரசியல்வாதிகள் தேவையில்லை” என விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்திலும் “பாடசாலைகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை வரவழைக்க வேண்டிய அவசியமில்லை” என புலமைபரிசில் பரீட்சை வினாத்தாள் தொடர்பில் இடம்பெற்ற கூட்டத்திலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்திகள் மற்றும் அறிக்கைகள்:

• https://www.facebook.com/share/v/Q74NdFXu3SDa5ycX/

• https://www.pmoffice.gov.lk/news.php?para=RU5vekFVR2dpQTd2VGRiMkZUNE4wTERha1RFaG1UbFhaNDFydlJnNWQwZ3hvK0Y2R2x3ZVBWSlRLYm1j=

இதன்படி, ஆனந்தா கல்லூரிக்கு பிரதமர் வருகைதந்தமை குறித்து கல்வி அமைச்சின் செயலாளர்  திலகா ஜயசுந்தரவிடம் factseeker வினவிய போது, 396 தேசிய பாடசாலைகளின் அதிபர்களை சந்திப்பதற்கு கல்வி அமைச்சில் போதிய இடமில்லாத காரணத்தினால் ஆனந்தா கல்லூரியின் குலரத்ன மண்டபம் தெரிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், இது குறித்து ஆனந்தா கல்லூரியின் அதிபர் லால் திஸாநாயக்கவிடம் factseeker வினவிய போது, ​​இது 5 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் அதிபர் சந்திப்பு எனவும் இதில் சிறுவர்கள் பங்குபற்றுவதில்லை எனவும் தெரிவித்தார்.

ஆகவே, கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடம்பெற்ற தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் பங்குபற்றிய விசேட செயலமர்விலேயே பிரதமர் ஹரினி அமரசூரிய பிரதம அதிதியாக கலந்து கொண்டார் என்பதையும், இது பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு அல்ல என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

#Misleading

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

#FAKE

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

#FAKE

இலங்கை குறித்து இப்ராஹிம் ட்ரொரே கருத்து தெரிவித்தாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

Related Content

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

மாலினியின் இறுதிச் சடங்கில் நடிகர்கள் நடனமாடினார்களா?

மே 28, 2025

வெளிநாட்டு சுற்றுலாப்பயணி தாக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளி கடந்த ஆண்டு பெப்ரவரியில் பதிவானதாகும்

மே 27, 2025

சமூக வலைதளங்களில் பகிரப்படும் புத்தரின் புனித தந்த தாது உண்மையல்ல

ஏப்ரல் 25, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection