Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

ஆட்சி அனுபவம் குறித்து ஹரிணி அமரசூரிய கூறியதாக பகிரப்படும் போலிச்செய்தி

Misleading
Misleading

"நிச்சயமாக நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியதில் எமக்கு அனுபவம் இல்லை. ஆனால் நாட்டைக் கட்டியெழுப்புவதில் இருந்து அனுபவத்தைப் பெறுகிறோம்."- ஹரிணி

by Anonymous |

செப்டம்பர் 30, 2024

“நாட்டை கட்டியெழுப்புவதில் எமக்கு அனுபவம் இல்லை” என ஹரிணி அமரசூரிய வெளிநாட்டு ஊடகவியலாளரிடம் தெரிவித்தார் என்ற பதிவுகள் சில சமூக ஊடகங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

நாட்டின் மூன்றாவது பெண் பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றத்தை அடுத்து இவ்வாறான பதிவுகள் பகிரப்படுவதால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.

சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்ட அப் பதிவில் “நாட்டை கட்டியெழுப்புவதில் எமக்கு அனுபவம் இல்லை, அனுபவத்தில் இருந்து கற்றுக் கொண்டுள்ளோம் என ஹரினி அமரசூரிய தெரிவித்தார். (விசித்திரத்தை கண்டு சிரிக்கும் வெளிநாட்டு ஊடக மேடை)” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனவா என ஆராய்ந்ததில் அவ்வாறான செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. மேலும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றதையடுத்து, கலாநிதி ஹரிணி அமரசூரிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த போது, ​​BBC ஊடகத்திற்கு அவர் ஆங்கிலத்தில் கருத்து தெரிவித்த காணொளியை Factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

https://www.facebook.com/share/v/dSj6Je8Uv4rm1orK/?mibextid=D5

அக்காணொளியில், அடுத்த அரசாங்கத்தின் அனுபவம் பற்றி விமர்சனம் எழுந்துள்ளது. இதை பற்றி உங்கள் கருத்து என்னவென்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு “நிச்சயமாக நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியதில் எமக்கு அனுபவம் இல்லை. ஆனால் நாட்டைக் கட்டியெழுப்புவதில் இருந்து அனுபவத்தைப் பெறுகிறோம்.” என ஹரிணி அமரசூரிய பதிலளித்தார்.

இது குறித்து ஹரிணி அமரசூரியவிடம் factseeker வினவிய போது, சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளது போன்ற எந்தவொரு கருத்தையும் தான் கூறவில்லை எனவும் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய அனுபவம் தனக்கு இல்லை என்றே தான் கூறியதாகவும் தெரிவித்தார்.

ஆகவே, “நாட்டை கட்டியெழுப்புவதில் எமக்கு அனுபவம் இல்லை” என ஹரிணி அமரசூரிய வெளிநாட்டு ஊடகவியலாளரிடம் தெரிவித்தார் என சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் தவறானவை என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

உள்ளூராட்சி ஆணையாளருக்கு தனது விருப்பத்திற்கேற்ப வாக்கெடுப்பு முறையை தீர்மானிக்க அதிகாரம் உண்டா?

ஜூன் 19, 2025

ஈரான் வான்வழித் தாக்குதல்கள் எனப் பகிரப்படும் பழைய காணொளி

ஜூன் 16, 2025

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection