Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

ஆட்சி அனுபவம் குறித்து ஹரிணி அமரசூரிய கூறியதாக பகிரப்படும் போலிச்செய்தி

Misleading
Misleading

"நிச்சயமாக நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியதில் எமக்கு அனுபவம் இல்லை. ஆனால் நாட்டைக் கட்டியெழுப்புவதில் இருந்து அனுபவத்தைப் பெறுகிறோம்."- ஹரிணி

by Anonymous |

செப்டம்பர் 30, 2024

“நாட்டை கட்டியெழுப்புவதில் எமக்கு அனுபவம் இல்லை” என ஹரிணி அமரசூரிய வெளிநாட்டு ஊடகவியலாளரிடம் தெரிவித்தார் என்ற பதிவுகள் சில சமூக ஊடகங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

நாட்டின் மூன்றாவது பெண் பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றத்தை அடுத்து இவ்வாறான பதிவுகள் பகிரப்படுவதால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.

சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்ட அப் பதிவில் “நாட்டை கட்டியெழுப்புவதில் எமக்கு அனுபவம் இல்லை, அனுபவத்தில் இருந்து கற்றுக் கொண்டுள்ளோம் என ஹரினி அமரசூரிய தெரிவித்தார். (விசித்திரத்தை கண்டு சிரிக்கும் வெளிநாட்டு ஊடக மேடை)” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனவா என ஆராய்ந்ததில் அவ்வாறான செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. மேலும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றதையடுத்து, கலாநிதி ஹரிணி அமரசூரிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த போது, ​​BBC ஊடகத்திற்கு அவர் ஆங்கிலத்தில் கருத்து தெரிவித்த காணொளியை Factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

https://www.facebook.com/share/v/dSj6Je8Uv4rm1orK/?mibextid=D5

அக்காணொளியில், அடுத்த அரசாங்கத்தின் அனுபவம் பற்றி விமர்சனம் எழுந்துள்ளது. இதை பற்றி உங்கள் கருத்து என்னவென்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு “நிச்சயமாக நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியதில் எமக்கு அனுபவம் இல்லை. ஆனால் நாட்டைக் கட்டியெழுப்புவதில் இருந்து அனுபவத்தைப் பெறுகிறோம்.” என ஹரிணி அமரசூரிய பதிலளித்தார்.

இது குறித்து ஹரிணி அமரசூரியவிடம் factseeker வினவிய போது, சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளது போன்ற எந்தவொரு கருத்தையும் தான் கூறவில்லை எனவும் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய அனுபவம் தனக்கு இல்லை என்றே தான் கூறியதாகவும் தெரிவித்தார்.

ஆகவே, “நாட்டை கட்டியெழுப்புவதில் எமக்கு அனுபவம் இல்லை” என ஹரிணி அமரசூரிய வெளிநாட்டு ஊடகவியலாளரிடம் தெரிவித்தார் என சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் தவறானவை என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#false

மௌபிமவின் பக்க வடிவமைப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தொடர்பில் போலிச்செய்தி

ஜனவரி 12, 2026

#false

ஒரே ஓவரில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி உலகசாதனை என பகிரப்படும் தவறான காணொளி

ஜனவரி 7, 2026

#Misleading

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

#Misleading

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

Related Content

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

சிவனொளிபாதமலையில் மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றமை உண்மையே

டிசம்பர் 2, 2025

நுகேகொடை பேரணியில் சாராயபோத்தல்கள் வழங்கப்பட்டதாக பகிரப்படுவது பழைய புகைப்படங்களாகும்

நவம்பர் 24, 2025

20,000 பொலிஸ் அதிகாரிகள் இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளதாக சாமர சம்பத் எம்.பி கூறிய கூற்று தவறானது

நவம்பர் 24, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection