Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

பாராளுமன்ற வருடாந்திர உட்புற விளையாட்டுப் போட்டியிலேயே கொட்டஹச்சி மற்றும் சதுரங்க அபேசிங்க ஆகியோர் மேசைப்பந்து விளையாடினர்.

Misleading
Misleading

இலங்கை பாராளுமன்றத்தின் வருடாந்திர உட்புற விளையாட்டுப் போட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

by Anonymous |

மார்ச் 25, 2025

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி மற்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோர் மேசைப்பந்து விளையாடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இதே புகைப்படம் ஹிரு நியூஸ் பேஸ்புக் பக்கத்திலும், “பட்ஜெட் விவாதத்தின் போது பிரதி அமைச்சர் சதுரங்கவுடன் கொட்டஹச்சி மேசைப்பந்து விளையாடுகிறார்” என்ற வாசகத்துடன் பகிரப்பட்டுள்ளது,

இந்தப் புகைப்படம் பல்வேறு சமூக ஊடக தளங்களில் பகிரப்படுவதுடன், மக்களின் வரிப்பணத்தில் இவர்கள் விநோதமாக உள்ளனர் போன்ற கருத்துகள் அதில் பதிவாகியுள்ளன.

இதன் காரணமாக இந்தப் புகைப்படம் தொடர்பில் factseeker ஆராய்ந்தது.

இலங்கை பாராளுமன்றத்தால் வெளியிடப்பட்ட ஊடக அறிவிப்பில், இந்த புகைப்படத்துடன் தொடர்புடைய நிகழ்வின் பல புகைப்படங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இது இலங்கை பாராளுமன்றத்தின் வருடாந்திர உட்புற விளையாட்டுப் போட்டியில் வெற்றிப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையாகும்.

இந்த உள்ளகப் போட்டியில் நடைபெற்ற இரட்டையர் போட்டியில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவும் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சியும் வெற்றி பெற்றதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் போட்டிக்கான வெற்றியாளர்களுக்கான பதக்கங்களை வழங்கும் நிகழ்வு கடந்த 21 ஆம் திகதி பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஆகியோரின் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

அதன்படி, இந்தப் புகைப்படம் பாராளுமன்றத்தில் நடைபெறும் வருடாந்திர உள்ளரங்கு போட்டியின் மேசைப்பந்து இரட்டையர் போட்டியின் போது பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹாச்சி ஆகியோருடன் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#false

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

#FAKE

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

#AI generated

பாலம் இடிந்து விழுந்ததாக பகிரப்படும் AI காணொளி : Grok AI-இன் பதில்களிலும் தவறு

பிப்ரவரி 9, 2026

#false

சனூஸ் எம்.பெரோஸ் அவர்கள் 2022 இல் காலமானார் : இன்றென பகிரப்படும் தவறான செய்திகள்

பிப்ரவரி 3, 2026

Related Content

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

சிவனொளிபாதமலையில் மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றமை உண்மையே

டிசம்பர் 2, 2025

நுகேகொடை பேரணியில் சாராயபோத்தல்கள் வழங்கப்பட்டதாக பகிரப்படுவது பழைய புகைப்படங்களாகும்

நவம்பர் 24, 2025

20,000 பொலிஸ் அதிகாரிகள் இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளதாக சாமர சம்பத் எம்.பி கூறிய கூற்று தவறானது

நவம்பர் 24, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection