Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #explainer

TNL அலைவரிசை மூடப்படுகின்றதா?

Factual
Factual

TNL அலைவரிசை சுப்ரீம் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் சுப்ரீம் தொலைக்காட்சியுடன் இணைந்து செயற்படும்

by Anonymous |

ஜூலை 26, 2024

TNL அலைவரிசை ஆகஸ்ட் மாதம் 1ம் திகதியுடன் மூடப்படும் என்ற பதிவொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை factseekerஇனால் அவதானிக்க முடிந்தது.

’31 ஆண்டுகால சேவையை முடித்துக்கொண்டு ஆகஸ்ட் 1ஆம் திகதி TNL அலைவரிசை மூடப்படும்’ என்ற செய்தி “இரி” என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அச்செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றது.

இவ்வாறு பகிரப்படும் செய்தியின் உண்மைத்தன்மையை factseeker ஆராய்ந்து பார்த்ததில், அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 1ஆம் திகதியில் இருந்து தனது அலைவரிசை ‘சுப்ரீம் டிவி’ அலைவரிசையுடன் இணைந்து ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்படும் என, TNL அலைவரிசையின் நிறைவேற்றுக்குழு factseeker இடம் தெரிவித்தது. TNL அலைவரிசையின் அனைத்து ஊழியர்களும் எதிர்காலத்தில் ‘சுப்ரீம் டிவி’ நிருவாகத்துடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்பதையும் உறுதிப்படுத்தியது.

Supreme Media Networkஇன் பணிப்பாளர் காஞ்சன கொடிதுவுக்குவிடம் factseeker வினவியபோது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் விறுவிறுப்பை பார்வையாளர்களிடம் மேன்மையாகக் கொண்டு செல்வதற்காக TNL அலைவரிசை சுப்ரீம் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் சுப்ரீம் தொலைக்காட்சியுடன் இணைந்து செயற்படும் எனவும் அவர் உறுதிப்படுத்தினார்.

இதற்காக, சுப்ரீம் குளோபல் பிரைவட் நிறுவனம் TNL நிர்வாகத்துடன் ஒரு மூலோபாய ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் TNLஇன் ஊடக நிபுணத்துவம் மற்றும் சுப்ரீம் மீடியா நெட்வேர்க்கின் சமீபத்திய தொழிநுட்பம் ஆகியவற்றைக் கொண்டு விரிவான தகவல்களை வழங்குவதாகவும் காஞ்சன கொடிதுவக்கு தெரிவித்தார்.

ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் “சுப்ரீம் டி.என்.எல்” தொலைக்காட்சி அலைவரிசையாக அறியப்படும் என்றும், ஆரம்பம் முதல் மக்களைக் கவர்ந்த “ஜனஹத” உள்ளிட்ட தற்போதைய அரசியல் நிகழ்ச்சிகள் அதற்கேற்ப ஒளிபரப்பப்படும் என்றும் காஞ்சன கொடிதுவக்கு மேலும் தெரிவித்தார்.

இது குறித்து சுப்ரீம் குளோபல் பிரைவட் லிமிடெட் நிறுவனம் ஒரு ஊடக அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.

Latest updates

#Misleading

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

#Misleading

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

#FAKE

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

#FAKE

இலங்கை குறித்து இப்ராஹிம் ட்ரொரே கருத்து தெரிவித்தாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

Related Content

கஜகஸ்தான் விமான விபத்தில் அனைவரும் உயிரிழந்தார்களா?

டிசம்பர் 27, 2024

சீன நன்கொடையால் வழங்கப்பட்ட சீருடைத் துணிகள்: முன்னாள் கல்வி அமைச்சரின் பங்களிப்பா?

டிசம்பர் 20, 2024

வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்ததா?

டிசம்பர் 12, 2024

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இனி நடாத்தப்படாதா ?

நவம்பர் 26, 2024

எதிர்காலத்தில் ஜனாதிபதி அநுரவின் கையொப்பத்துடன் புதிய நாணயத்தாள்கள் வருமாயின் அது எவ்வாறு ?

நவம்பர் 5, 2024

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection