Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு

NPPயின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிதாக 33,000 ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்புகள் என குறிப்பிடப்பட்டுள்ளதா?

Misleading
Misleading

அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் 20,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

by Anonymous |

ஆகஸ்ட் 27, 2024

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தமது அரசாங்கத்தின் கீழ் வேலை வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து factseeker அவதானம் செலுத்தியதில், இம்மாதம் (ஆகஸ்ட்) 8ஆம் திகதி அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வேலையற்ற பட்டதாரிகள் குழுவைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அநுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்திருந்தார் என்பதை அறிய முடிந்தது.

“எதிர்காலத்தில் வேலையில்லா பட்டதாரிகளை உருவாக்காத வகையில் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயாராக உள்ளது. தற்போது 33,000 ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அத்துடன், உள்ளூர் வருமான வரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என அநுரகுமார திஸாநாயக்க அங்கு தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க இது பற்றி ஊடகங்களுக்கு தெரிவித்த காணொளி அவரது யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=3DYglhurYXY

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக “வளமான நாடு, அழகான வாழ்வு” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் “பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு” என்ற பிரிவை தேசிய மக்கள் சக்தி ஒதுக்கியுள்ளது. அப் பிரிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

– ஆசிரியர் தொழிலில் 20,000 பட்டதாரிகள்

– 3000 அறிவியல், தொழில்நுட்பம், ஆங்கிலம், கணிதம் (STEM) பட்டதாரிகள் மற்றும் 9000 STEM அல்லாத பட்டதாரிகள் உட்பட 12,000 IT பட்டதாரிகள்.

– உள்நாட்டு வருவாய், சுங்கம், வெளிநாட்டு சேவைகள் மற்றும் சுற்றுலா ஆகியவற்றுக்கான 3000 வேலைகள்.

ஆகவே 33,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்த போதிலும், அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் 20,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

வரங்கனா கெகுலாவல லொத்தர் பரிசொன்றை வென்றார் என்ற செய்தி உண்மையே.

ஜூலை 8, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection