Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

Dilmah நிறுவனம் வசந்த சமரசிங்கவிற்கு வருடாந்த அனுசரணை தொகையை வழங்கியதா?

False
False

14 மே 2021 என்ற திகதியிடப்பட்டு பகிரப்படும் கடிதம் ஒரு மோசடி கடிதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

by Anonymous |

செப்டம்பர் 17, 2024

தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்கவின் பெயரில் Dilmah நிறுவனம் வருடாந்த அனுசரணை தொகையை வழங்கி வருவதாக கூறும் கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

Dilmah நிறுவன உரிமையாளர் மெரில் ஜே. பெர்னாண்டோவின் கையொப்பதுடன் மே 14, 2021 என்ற திகதி இடப்பட்ட கடிதமே இவ்வாறு பகிரப்பட்டு வருகின்றது. அக்கடிதத்தில், வசந்த சமரசிங்க கோரியவாறு Dilmah நிறுவனம் 15 இலட்சம் ரூபாவை ‘வருடாந்திர அனுசரணை தொகையாக’ செலுத்தியுள்ள போதிலும் தேசிய தொழிற்சங்க நிலையத்தைச் சேர்ந்த ஒருவர் Dilmah நிறுவனத்தை பணத்திற்காக அச்சுறுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் சந்தேகத்திற்குரிய இக்கடிதம் தொடர்பில் factseeker ஆராய்ந்தது. இக்கடிதம் மற்றும் அதில் குறிப்பிட்டப்பட்டுள்ள தகவல் குறித்து பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதா என ஆராய்ந்த போதிலும் அவ்வாறான செய்திகளை எதுவும் வெளியிடவில்லை என்பதை அறியமுடிந்தது.

இது தொடர்பில் வசந்த சமரசிங்கவிடம் factseeker வினவிய போது, ​​இது முற்றிலும் பொய்யானது என்றும் தேசிய மக்கள் சக்தியை சங்கடப்படுத்தும் நோக்கில் இவ்வாறான செய்திகள் பகிரப்படுகின்றது என்றும் தெரிவித்தார்.

மேலும், இது முற்றிலும் பொய்யானது என டில்மா நிறுவனத்தின் செயலாளர் ஜயங்க வெகொடபொலவின் கையொப்பத்துடன் வெளியிட்ட கடிதம் ஒன்றை காணக்கூடியதாக இருந்தது. அக் கடிதத்தில் 14 மே 2021 என்ற திகதியிடப்பட்டு பகிரப்படும் கடிதம் ஒரு மோசடி கடிதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்கவின் பெயரில் Dilmah நிறுவனம் வருடாந்த அனுசரணை வழங்கி வருவதாக கூறும் கடிதம் போலியான கடிதம் என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

#Misleading

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

#FAKE

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

#FAKE

இலங்கை குறித்து இப்ராஹிம் ட்ரொரே கருத்து தெரிவித்தாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

Related Content

DIALOG இன் இலவச சலுகைகள் என பகிரப்படும் போலிச் செய்தி

ஜூன் 2, 2025

மிஸ்டர் பீன் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 29, 2025

இலங்கையில் மோசமான கொவிட் வைரஸ் பரவுவதாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 21, 2025

ஹயேஷிகா பெர்னாண்டோ தனது சிலைகளை உருவாக்கி விற்பனை செய்கிறார் என பகிரப்படும் போலிச்செய்தி

மே 19, 2025

வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 9, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection