Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

“Daily Mirror” இணையதள பக்க வடிவமைப்புடன் பகிரப்படும் போலிச்செய்தி

False
False

Daily Mirror வலைத்தளத்தைப் போலவே ஒரு போலி வலைத்தளம் இருப்பதாகவும், இது ஒரு போலியான செய்தி என்றும் Daily Mirror இணையதள நிர்வாகி FactSeeker க்கு தெரிவித்தார்.

by Anonymous |

மார்ச் 14, 2025

“இலங்கையில் வசிப்பவர்கள் வரிகளிலிருந்து வருமானத்தைப் பெறத் தொடங்குவார்கள்” என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்ததாக “Daily Mirror” இணையதள பக்க வடிவமைப்புடனான செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

https://shorturl.at/7cx3h

“விஜித ஹேரத்தின் உத்தரவின் பெயரில், இலங்கையில் வசிப்பவர்கள் வரிகளிலிருந்து வருமானத்தைப் பெறத் தொடங்குவார்கள்” என்ற தலைப்புடன் நேர்க்காணல் வடிவமைப்பிலான செய்தியே இவ்வாறு பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து ஆராயுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதன் அடிப்படையில், FactSeeker இதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்தது.

இச் செய்தி வெளியாகியுள்ள இணையதளத்தை ஆராய்ந்ததில், இது Daily Mirror ஊடக நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் அல்ல என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. இவ்வலைத்தளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இலச்சினை Daily Mirror ஊடக நிறுவனத்தின் பழைய இலச்சினை என்பதையும் அறிய முடிந்தது.

மேலும், இவ்வாறான செய்தி Daily Mirror இன் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளதா என ஆராய்ந்ததில், அவ்வாறான செய்தி எதுவும் வெளியாகவில்லை என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.

இது தொடர்பில் Daily Mirror இணையதள நிர்வாகி ஒருவரிடம் FactSeeker வினவிய போது, Daily Mirror வலைத்தளத்தைப் போலவே ஒரு போலி வலைத்தளம் இருப்பதாகவும், இது ஒரு போலியான செய்தி என்றும் பல சந்தர்ப்பங்களில் இது குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஆகவே, “இலங்கையில் வசிப்பவர்கள் வரிகளிலிருந்து வருமானத்தைப் பெறத் தொடங்குவார்கள்” என்று அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்ததாக “Daily Mirror” இணையதள பக்க வடிவமைப்புடன் வெளியாகிய செய்தி போலியானது என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

ஷாருக்கான் முன் பயிற்சிக்காக கொழும்புக்கு வந்ததாக பகிரப்படும் புகைப்படம் AI ஆகும்.

ஜூலை 7, 2025

அண்டர்டேக்கர் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

ஜூன் 23, 2025

DIALOG இன் இலவச சலுகைகள் என பகிரப்படும் போலிச் செய்தி

ஜூன் 2, 2025

மிஸ்டர் பீன் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 29, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection