Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

25 லட்சம் கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தவறான செய்தி பரவுகின்றது

False
False

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வெவ்வேறு காரணங்களுக்காக நாட்டைவிட்டு வெளியேறிய இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகம்.

by Anonymous |

மே 8, 2024

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 25 லட்சம் கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சில செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல கூறியதாக இணையதளம் ஒன்று முதலில் இந்த செய்தியை வெளியிட்டுள்ள நிலையில் அச்செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் வருகின்றது.

எனினும், கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறியதை உறுதிப்படுத்தும் தரமோ அல்லது வழியோ இல்லாத காரணத்தினால், factseeker, இது குறித்து பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரலவிடம் வினவியது.

இது குறித்து கருத்து தெரிவித்திருந்த பேராசிரியர் வசந்த அத்துகோரல, 25 லட்சம் கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக தாம் ஒருபோதும் கூறவில்லை என தெரிவித்திருந்தார். கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளுக்குச் சென்ற தொகையை இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் அடிப்படையில் சமர்ப்பித்ததாகவும் ஆனால் ஊடகங்கள் அச் செய்தியின் அர்த்தத்தை மாற்றி செய்தியை வெளியிட்டதாகவும் அவர் factseeker இடம் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக கடந்த நான்கு வருடங்களில் வெளிநாட்டுக்கு சென்றுள்ள இலங்கையர்களின் தரவுகளை இலங்கை மத்திய வங்கி மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் தரவுகளின்படி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் இலங்கை கொவிட் வைரஸ் தொற்று தாக்கத்தை எதிர்கொண்டிருந்ததுடன், 2022 ஆம் ஆண்டில் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்தது. அதற்கமைய 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வெவ்வேறு காரணங்களுக்காக நாட்டைவிட்டு வெளியேறிய இலங்கையர்களின் எண்ணிக்கை உயரிய மட்டத்தை வெளிப்படுத்துகின்றது.

Latest updates

#false

மௌபிமவின் பக்க வடிவமைப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தொடர்பில் போலிச்செய்தி

ஜனவரி 12, 2026

#false

ஒரே ஓவரில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி உலகசாதனை என பகிரப்படும் தவறான காணொளி

ஜனவரி 7, 2026

#Misleading

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

#Misleading

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

Related Content

மௌபிமவின் பக்க வடிவமைப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தொடர்பில் போலிச்செய்தி

ஜனவரி 12, 2026

ஒரே ஓவரில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி உலகசாதனை என பகிரப்படும் தவறான காணொளி

ஜனவரி 7, 2026

விக்டோரியா, மொரகஹகந்த மற்றும் கொத்மலை நீர்த்தேக்கங்களில் அணைக்கட்டு உடையும் அபாயம் இருப்பதாக பகிரப்படும் போலிச்செய்திகள்

டிசம்பர் 1, 2025

ஜனாதிபதி அநுரவின் ஜெர்மனி விஜயம் தனிப்பட்ட விஜயமா ?

ஆகஸ்ட் 27, 2025

நீதிபதி நிலுபுலி லங்காபுர, தயா லங்காபுரவின் மகள் அல்ல.

ஆகஸ்ட் 25, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection