Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #FAKE

ஹோமாகம கூட்டு பாலியல் வன்கொடுமையுடன் தொடர்புபட்டதாக பகிரப்படும் மாணவர்களின் புகைப்படங்கள் AI ஆகும்

False
False

Sightengine உட்பட பல AI Detector தளங்கள் மூலம் இப் புகைப்படங்களை ஆராய்ந்ததில், இவை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

by Anonymous |

ஏப்ரல் 7, 2025

கடந்த சில நாட்களுக்கு முன் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக ஹோமாகம பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் ஏழு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இது குறித்து சமூக வலைதளங்களில் பலர் தமது கருத்துக்களை பதிவிட்டதோடு, கைது செய்யப்பட்ட மாணவர்களின் புகைப்படம் என்றும் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளான சிறுமியின் புகைப்படம் என்றும் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

அப் புகைப்படங்களை ஆராய்ந்த போது, சில தெளிவற்ற அம்சங்களை அவதானிக்க முடிந்தது. ‘கைது செய்யப்பட்ட மாணவர்கள்’ என கூறப்படும் புகைப்படத்தில் உள்ள மாணவர்களின் முகங்கள் ஒரே முக அம்சங்களை கொண்டதாக காணப்படுவதோடு, அவர்கள் அணிந்திருக்கும் பாடசாலை சீருடை எமது நாட்டின் பாடசாலை சீருடைக்கு முரணானதாக காணப்பட்டது. மேலும்,’பாலியல் வன்முறைக்கு உள்ளான சிறுமியின் புகைப்படம்’ என பகிரப்படும் புகைப்படத்தில் அதே போன்ற சில முரணான அம்சங்களை காண முடிந்தது. இதன் மூலம், இந்த புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதை யூகிக்க முடிந்தது.

இதனை உறுதிப்படுத்த, Sightengine உட்பட பல AI Detector தளங்கள் மூலம் புகைப்படங்களை ஆராய்ந்ததில், இப் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

இந்நிலையில் பலர் இப் புகைப்படம் உண்மையென நம்பி தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆகவே, ஹோமாகம கூட்டு பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதை FactSeeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#Misleading

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

#Misleading

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

#FAKE

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

#FAKE

இலங்கை குறித்து இப்ராஹிம் ட்ரொரே கருத்து தெரிவித்தாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

Related Content

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

இலங்கை குறித்து இப்ராஹிம் ட்ரொரே கருத்து தெரிவித்தாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

259வது பிறந்த நாளைக் கொண்டாடும் முதியவர் என பகிரப்படும் AI புகைப்படம்

மே 23, 2025

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவின் பெயரில் பகிரப்படும் போலிக்கடிதம்

மே 22, 2025

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் பெயரில் இயங்கும் போலி facebook பக்கம்

மே 20, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection