Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக பகிரப்படும் போலிச்செய்தி

False
False

இது போன்ற விளம்பர பதிவுகளால் தனிப்பட்ட தரவுகளை திரட்டும் வகையிலான ஏமாற்று நடவடிக்கைகள் இடம்பெறலாம் என்பதை FactSeeker எச்சரிக்கின்றது.

by Anonymous |

மே 9, 2025

“வேலைவாய்ப்பு, வீட்டிலிருந்தே வேலை செய்யும் வேலையாட்கள் தேவை” போன்ற தலைப்புடன் சில விளம்பர பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

தொழில் அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் வங்கிகள் மற்றும் முன்னனி வணிக நிறுவனங்களுக்கு இவ் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக அப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இதற்கு பலர் தமது கருத்துக்கள் மற்றும் சுய தகவல்களை பதிவிட்டு வருவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

அப் புகைப்படங்களை பதிவிட்டிருந்த முகநூல் பக்கங்களை ஆராய்ந்ததில், அவை இலங்கையை சார்ந்த சமூகவலைதள பக்கங்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. அப் பக்கங்களில் வெளிநாட்டு பெயர் மற்றும் தகவல்களே உள்ளடக்கப்பட்டுள்ளன. எனவே அவை போலியான முகநூல் பக்கங்கள் என்பதையும் அப் புகைப்பட பதிவுகள் உண்மையானதல்ல என்பதையும் யூகிக்க முடிந்தது.

இது தொடர்பில் மேலும் உறுதிப்படுத்த, தொழில் அமைச்சிடம் FactSeeker வினவிய போது, இது போன்ற முன்னனி வணிக நிறுவனங்களுடன் சேர்ந்து எந்தவொரு வேலைத்திட்டங்களும் எங்களால் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

மேலும், தொழில் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தை ஆராய்ந்ததில், வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்கள் காணப்பட்டாலும் இது போன்ற திட்டங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

ஆகவே, தொழில் அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் வீட்டிலிருந்தே வேலை செய்யும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதாக சமூகவலைதளங்களில் பகிரப்படும் விளம்பர பதிவுகள் போலியானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துவதோடு இது போன்ற விளம்பர பதிவுகளால் தனிப்பட்ட தரவுகளை திரட்டும் வகையிலான ஏமாற்று நடவடிக்கைகள் இடம்பெறலாம் என்பதையும் எச்சரிக்கின்றது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

ஷாருக்கான் முன் பயிற்சிக்காக கொழும்புக்கு வந்ததாக பகிரப்படும் புகைப்படம் AI ஆகும்.

ஜூலை 7, 2025

அண்டர்டேக்கர் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

ஜூன் 23, 2025

DIALOG இன் இலவச சலுகைகள் என பகிரப்படும் போலிச் செய்தி

ஜூன் 2, 2025

மிஸ்டர் பீன் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 29, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection