Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

வீடுகளுக்கு சென்று எயிட்ஸ் பரப்புவதாக வதந்தி பரவுகின்றது

False
False

அவ்வப்போது மக்களை எரிச்சலூட்டும் வகையில் இவ்வாறான பொய்யான செய்திகள் பகிரப்பட்டு வருவதால், இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் தெரிவித்துள்ளது

by Anonymous |

மே 27, 2024

“இதைக் கேட்டு மக்களுக்கு பகிருங்கள்…” என்று தெரிவிக்கும் குரல் பதிவொன்று அண்மைய நாட்களாக வட்ஸ்-அப் கணக்குகளில் பகிரப்பட்டு வருவதுடன், இந்தக் குரல் பதிவில் தெரிவிக்கப்படும் செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயுமாறு factseeker இற்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் பொதுமக்களுக்கு இலவசமாக இரத்தம் பரிசோதிக்கப்படுவதாக கூறி வீடுகளுக்கு வருவதாகவும், அவ்வாறு இரத்தத்தை பரிசோதிப்பதாக கூறி எயிட்ஸ் நோயினை பரப்புவதாகவும், ஆகவே இவ்வாறான நபர்களை வீடுகளுக்கு அனுமதிக்காது பாதுகாப்பாக இருக்குமாறு தெரிவித்தே இந்த குரல் பதிவு பகிரப்படுகின்றது. குறித்த குரல் பதிவை பலர் தமது வட்ஸ்-அப் கணக்குகளில் அதிகளவில் பகிர்ந்தும் வருகின்றனர்.

இவ்வாறான மோசடிகள் இடம்பெற்றுள்ளதா என சுகாதார அமைச்சிடம் factseeker வினவிய போது, இவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெற்றதாக எவ்வித முறைப்பாடுகளும் தமக்குக் கிடைக்கவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அதேபோன்று, இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதா என பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவிடம் factseeker வினவியபோது, ​​அவ்வாறான முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும், அவ்வப்போது மக்களை எரிச்சலூட்டும் வகையில் இவ்வாறான பொய்யான செய்திகள் பகிரப்பட்டு வருவதால், இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

எனவே, மக்களை அச்சமூட்டும் விதத்தில் பகிரப்படும் இந்தக் குரல் பதிவானது போலியான தகவல்களை உள்ளடக்கிய ஒன்றென்பதை factseeker உறுதி செய்கின்றது.

Latest updates

#Misleading

நுகேகொடை பேரணியில் சாராயபோத்தல்கள் வழங்கப்பட்டதாக பகிரப்படுவது பழைய புகைப்படங்களாகும்

நவம்பர் 24, 2025

#Misleading

20,000 பொலிஸ் அதிகாரிகள் இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளதாக சாமர சம்பத் எம்.பி கூறிய கூற்று தவறானது

நவம்பர் 24, 2025

#AI generated

சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் நடிகை சாய் பல்லவியின் AI புகைப்படங்கள்

செப்டம்பர் 26, 2025

#fasle

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் டீசல் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னவின் கூற்று தவறானது

செப்டம்பர் 9, 2025

Related Content

ஜனாதிபதி அநுரவின் ஜெர்மனி விஜயம் தனிப்பட்ட விஜயமா ?

ஆகஸ்ட் 27, 2025

நீதிபதி நிலுபுலி லங்காபுர, தயா லங்காபுரவின் மகள் அல்ல.

ஆகஸ்ட் 25, 2025

ஜக்கி சான் இறந்துவிட்டார் என பகிரப்படும் போலிச்செய்தி

ஆகஸ்ட் 5, 2025

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

ஷாருக்கான் முன் பயிற்சிக்காக கொழும்புக்கு வந்ததாக பகிரப்படும் புகைப்படம் AI ஆகும்.

ஜூலை 7, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection