Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

வலுசக்தி அமைச்சர் பொறியியல் பட்டதாரி பரீட்சார்த்தியென மஹிந்த தேசப்பிரிய கூறியதாக போலிச்செய்தி

False
False

பாராளுமன்ற இணையதளத்தில் எம்.பி.க்கள் பட்டியலில் குமார் ஜெயக்கொடியின் தகவல்களை சரிபார்த்தபோது, அவரது கல்வித் தகுதி குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை

by Anonymous |

டிசம்பர் 16, 2024

வலுசக்தி அமைச்சர் புண்ய ஸ்ரீ குமார ஜயக்கொடி பொறியியல் பட்டதாரி பரீட்சார்த்திர் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியதாக சமூக வலைதளங்களில் பல பதிவுகள் பகிரப்படுகின்றன.

இது தொடர்பான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தியில்,

” வலுசக்தி அமைச்சர் திரு.குமார ஜயக்கொடி தன்னை பொறியியலாளர் என்று பொய்யாக காட்டிக் கொள்வதாக சமூக வலைதளங்களில் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனவும், திரு.குமார ஜயக்கொடி பாராளுமன்றத்தில் வழங்கிய தகவல்களில் தாம் பொறியியல் பட்டதாரி பரீட்சார்த்திர்” என குறிப்பிட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய
வானொலி அலைவரிசையுடனான கலந்துரையாடலொன்றில் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் “சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள செய்தியின் பிரகாரம் அமைச்சர் பொய்யான அறிக்கையை வெளியிட்டதாக குற்றம் சுமத்துவது முறையானதல்ல” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

அந்த செய்திகளுக்கான இணைப்புகள் கீழே உள்ளன.

https://janahanda.site/#/news/9

https://sinhala-themorningtelegraph.com/?p=4617

https://newsweb.lk/archives/34102

இந்த விடயம் தொடர்பில் ​​FactSeeker ஆராய்ந்து பார்த்த போது, மஹிந்த தேசப்பிரிய பங்குபற்றிய அண்மைய வானொலி கலந்துரையாடல்கள் தொடர்பில் கண்டறிய முடிந்தது.

இவ்வாண்டு டிசம்பர் மாதம் 06ஆம் திகதி, Neth வானொலி சேவையில் ஒளிபரப்பான ̒ Balumgala̕ நிகழ்ச்சிக்கான தொலைபேசி நேர்காணலில், அவர் ஒரு குறிப்பிட்ட அமைச்சரைப் பற்றி கருத்துத் தெரிவித்திருப்பதை அவதானிக்க முடிந்தது,

https://youtu.be/Sj-8cwmNr-o?t=394

அதன்போது, அமைச்சர் ஒருவர் தன்னை பொறியியலாளர் என்று கூறினாலும் அவர் பொறியியலாளர் அல்ல. ஆனால், பொறியியல் பட்டதாரி பரீட்சார்த்தியாக பாராளுமன்றத்தில் தனது தகவல்களை அவர் வழங்கியுள்ளதாக அந்த நிகழ்ச்சியில் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.ஆனால் அந்த விமர்சனனத்தில் எந்த இடத்திலும் வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

ஆகவே மஹிந்த தேசப்பிரிய கூறும் காரணி குமார் ஜெயக்கொடி பற்றியதா என்பதை அறிய, பாராளுமன்ற இணையதளத்தில் எம்.பி.க்கள் பட்டியலில் குமார் ஜெயக்கொடியின் தகவல்களை சரிபார்த்தபோது, அவரது கல்வித் தகுதி குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அவரது தொழில் பொறியியலாளர் என்று பட்டியலிடப்பட்டது.

அதனையடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் இது குறித்து வினவியபோது, அவர் மேற்கண்ட பதிவுகளில் கூறியது போன்று வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தொடர்பில் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை எனத் தெரிவித்தார்.

இதன்படி, வலுசக்தி அமைச்சர் புண்ய ஸ்ரீ குமார ஜயக்கொடி பொறியியல் பட்டதாரி பரீட்சார்த்தி என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள பதிவுகள் பொய்யானவை என FactSeeker உறுதிப்படுத்தியுள்ளது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

ஷாருக்கான் முன் பயிற்சிக்காக கொழும்புக்கு வந்ததாக பகிரப்படும் புகைப்படம் AI ஆகும்.

ஜூலை 7, 2025

அண்டர்டேக்கர் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

ஜூன் 23, 2025

DIALOG இன் இலவச சலுகைகள் என பகிரப்படும் போலிச் செய்தி

ஜூன் 2, 2025

மிஸ்டர் பீன் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 29, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection