Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீள்குடியேற்றத்துக்காக 2,000 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதா?

Misleading
Misleading

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீள்குடியேற்றத்துக்காக அரசாங்கம் 2.0 பில்லியன் ( இரண்டாயிரம் மில்லியன் ரூபா) ஒதுக்கியிருப்பதே சரியான நிதி ஒதுக்கீடாகும் என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

by Anonymous |

நவம்பர் 13, 2023

2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று திங்கட்கிழமை (13) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீள்குடியேற்றத்துக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதி குறித்து சமூக வலைதளங்களில் முரண்பாடான சில தரவுகளை factseekerஇனால் அவதானிக்க முடிந்தது. குறிப்பாக “வரலாற்றில் முதல் தடவையாக வடக்கு கிழக்குக்கு அதிக நிதி ஒதுக்கீடு.. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீள்குடியேற்றத்துக்காக 2,000 பில்லியன் ரூபா ஒதுக்கீடு : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க” என்ற ட்விட்டர் பதிவொன்று காணப்பட்டது.

வரவு செலவு திட்டம் குறித்த செய்திகளை வெளியிட்டுள்ள பிரதான தமிழ் ஊடகமான வீரகேசரியின் இணையதளத்திலும் அதன் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீள்குடியேற்றத்துக்காக 2,000 பில்லியன் ரூபா ஒதுக்கீடு என்ற செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது.

பட்டிநியூஸ் (http://www.battinews.com/)என்ற இணையதளத்திலும் வடக்கு கிழக்கிற்கு 2000 பில்லியன் ரூபா ஒதுக்கீடு என்ற செய்தியே பிரசுரிக்கப்பட்டிருந்தது.

எனினும் இது தொடர்பில் factseeker ஆராய்ந்து பார்த்ததில் குறித்த ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்திகளில் நிதி ஒதுக்கீடு குறித்து தவறுகள் இருப்பதை அவதானிக்க முடிந்தது.

நிதி அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட அறிக்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீள்குடியேற்றத்துக்காக அரசாங்கம் 2.0 பில்லியன் ( இரண்டாயிரம் மில்லியன் ரூபா) ஒதுக்கியிருப்பதே சரியான நிதி ஒதுக்கீடாகும் என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

 

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

வரங்கனா கெகுலாவல லொத்தர் பரிசொன்றை வென்றார் என்ற செய்தி உண்மையே.

ஜூலை 8, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection