Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

‘லங்கா’ மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலிச்செய்தி

False
False

இந்த செய்தி குறித்து சுகாதார அமைச்சிடம் factseeker வினவியபோது, அவ்வாறான தகவல்கள் எதுவும் சுகாதார அமைச்சிற்கு பதிவாகவில்லை என்பதை உறுதிப்படுத்தியது. 

by Anonymous |

ஜூலை 29, 2024

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 200 மாலத்தீவு பிரஜைகள் ‘லங்கா’ மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், எனவே ‘லங்கா’ மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என்ற பிரசாரமொன்று சமூக வலைதளங்கள் மற்றும் வட்ஸ் -அப் குழுக்களில் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

அவ்வாறு பகிரப்படும் பதிவில், “அனைவருக்கும் வணக்கம். ‘லங்கா’ மருத்துவமனைக்கு காலடி எடுத்து வைக்க வேண்டாம். 200 மாலத்தீவியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பன்றிக்காய்ச்சல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் ஏற்கனவே 2-3 பேர் இறந்துவிட்டனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பகிரப்படும் செய்தியின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்கும் விதமாக FactSeeker,’லங்கா’ மருத்துவமனை நிர்வாகத்திடம் இது குறித்து விசாரணை நடத்தியது.

இதன்போது, சமூக வலைதளங்கள் மற்றும் வட்சப் குழுக்களில் இவ்வாறு பகிரப்படும் செய்தியில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை எனவும், இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என்பதையும் உறுதி செய்த மருத்துவமனை நிர்வாகம், அது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

சிறப்பு அறிவிப்பு
எமது வைத்தியசாலையில் பன்றிக் காய்ச்சல் நோயாளர்கள் கண்டறியப்பட்டதாக அல்லது சிகிச்சை அளிக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை என ‘லங்கா’ மருத்துவமனை நிர்வாகம் பொது மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறது. இந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை. முழு ஊடக தெளிவுபடுத்தல் விரைவில் இடம்பெறும்.
– லங்கா’ மருத்துவமனை நிர்வாகம்.

இவ்வாறு, அவ்வறிக்கை தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல், இந்த செய்தி குறித்து சுகாதார அமைச்சிடம் factseeker வினவியபோது, அவ்வாறான தகவல்கள் எதுவும் சுகாதார அமைச்சிற்கு பதிவாகவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.

முடிவு :-

ஆகவே, பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 200 மாலத்தீவு பிரஜைகள் ‘லங்கா’ மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், எனவே ‘லங்கா’ மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என வட்ஸ் -அப் மூலமாகவும், சமூக வலைதளங்களிலும் பகிரப்படும் பதிவானது போலியானது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

ஷாருக்கான் முன் பயிற்சிக்காக கொழும்புக்கு வந்ததாக பகிரப்படும் புகைப்படம் AI ஆகும்.

ஜூலை 7, 2025

அண்டர்டேக்கர் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

ஜூன் 23, 2025

DIALOG இன் இலவச சலுகைகள் என பகிரப்படும் போலிச் செய்தி

ஜூன் 2, 2025

மிஸ்டர் பீன் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 29, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection