Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

பேராசிரியர் மெத்திகா விதானகே சஜித் தரப்புடன் இணைந்ததாக போலிச்செய்தி

False
False

நான் சஜித் பிரேமதாசவை தனது வாழ்நாளில் சந்தித்ததில்லை : பேராசிரியர் மெத்திகா விதானகே

by Anonymous |

செப்டம்பர் 5, 2024

“ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் மெத்திகா விதானகே, இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குகிறார்” என்ற பதிவுடனான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவுடன் பேராசிரியர் மெத்திகா விதானகே கை குலுக்குவதைப்  போன்ற புகைப்படமே இவ்வாறு பகிரப்படுகின்றது.

இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராயும் விதமாக பேராசிரியர் மெத்திகா விதானகேவிடம் factseeker வினவிய போது, “நான் சஜித் பிரேமதாசவை தனது வாழ்நாளில் சந்தித்ததில்லை” என்றும் “இந்த பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் போலியானது” என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இப்புகைப்படம் 28.03.2024 அன்று தேசிய அடிப்படை ஆய்வுகள் நிறுவனத்தின் ஆராய்ச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை அறிய முடிந்தது. இப்புகைப்படம் தேசிய அடிப்படை ஆய்வுகள் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ facebook பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Link : https://www.facebook.com/share/kJRifbZoXw9L26UU/  

மேலும், இது குறித்து ஐக்கிய மக்கள் கூட்டணியின்  ஊடக பிரிவினரிடம் factseeker வினவிய போது இச் செய்தியில் உண்மையில்லை எனவும், இவ்வாறான எந்தவொரு சந்திப்பும் நடைபெறவில்லை எனவும் உறுதிப்படுத்தினர்.

ஆகவே, பேராசிரியர் மெத்திகா விதானகே, இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குகிறார் எனக் கூறும் பதிவுகள் போலியானவை என்பதையும் அப் பதிவுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் திரிபுப்படுத்தப்பட்ட புகைப்படம் என்பதையும் factseeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

ஷாருக்கான் முன் பயிற்சிக்காக கொழும்புக்கு வந்ததாக பகிரப்படும் புகைப்படம் AI ஆகும்.

ஜூலை 7, 2025

அண்டர்டேக்கர் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

ஜூன் 23, 2025

DIALOG இன் இலவச சலுகைகள் என பகிரப்படும் போலிச் செய்தி

ஜூன் 2, 2025

மிஸ்டர் பீன் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 29, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection