Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #factchecked

புகையிரதத்தில் ‘ மசாஜ் சேவை’ குறித்து எழுந்த சர்ச்சையின் பின்னணி

Misleading
Misleading

இலங்கையில் புகையிரத திணைக்களத்தினால் புதிதாக மசாஜ் சேவை ஆரம்பிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட பதிவுகள் உண்மைக்கு புறம்பானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

by Anonymous |

மார்ச் 5, 2025

கடந்த ஜனவரி மாதத்தில் “இலங்கையில் புகையிரத திணைக்களத்தினால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்பா மசாஜ் சேவை” என்ற பதிவுடன் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

இக் காணொளிக்கு பலர் தமது கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். சிலர் இக் காணொளி குறித்து உண்மை தன்மையை ஆராய வேண்டும் என தெரிவித்திருந்ததால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

https://bit.ly/3XsDmnC

https://puthiyakural.lk/2025/01/17/what-country-is-this-in-408

https://www.facebook.com/share/v/1XaKSaxXvh/

https://www.facebook.com/share/v/1C8ufnfG6U/

https://www.facebook.com/share/v/1ADnWcaLM1/

https://www.facebook.com/share/v/1ABSGdbrBL/

https://www.instagram.com/tv/DE5pj3_tA1N/

கடந்த ஜனவரி 17 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது குறித்து வினவிய போது, “புகையிரதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளூர்வாசிகள் மசாஜ் செய்வதை போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது. இது இலங்கை போக்குவரத்து திணைக்களத்தினால் இயக்கப்படும் புகையிரதத்தில் இடம்பெற்ற சம்பவம் இல்லை” என இலங்கை புகையிரத திணைக்கள பொது மேலாளர் ஜே.ஐ.டி. ஜெயசுந்தர தெரிவித்திருந்தார்.

மேலும், “ஓர் இலங்கையர் மற்றும் புகையிரத துறையின் ஊழியர் என்ற முறையில் இந்த சம்பவத்தை நான் மிகவும் அவமானகரமானதாகக் கருதுகிறேன். இந்த சம்பவம் இலங்கை புகையிரத திணைக்களத்தினால் இயக்கப்படும் வழக்கமான பயணிகள் புகையிரதத்தில் நடக்கவில்லை. மாறாக ஒரு தனியார் பயண நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட சிறப்பு புகையிரதத்தில் நடந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் இலங்கை புகையிரத திணைக்கள பொது மேலாளர்  தெரிவித்திருந்தார்.

மேலும், இலங்கை புகையிரத திணைக்கள பொது மேலாளரிடம் இது குறித்து வினவிய போது, இது குறித்து எந்தவொரு தகவலும் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்றும் மேலதிக தகவல்களை பெற எழுத்துப்பூர்வ கோரிக்கையை புகையிரத திணைக்களத்திற்கு சமர்ப்பிக்குமாறும் தெரிவித்தார். 21.01.2025 அன்று FactSeeker அனுப்பிய கோரிக்கைக்கு, ரயில்வே துணை கண்காணிப்பாளர் ஐ.எல்.டி.சி. குணசேகரன் பதிலளித்தார், இதன் மூலம் இச்சம்பவத்தின் பின்னணி சுருக்கமாக விளக்கப்பட்டது.

15.01.2025 அன்று பிலிமத்தலாவையிலிருந்து கொழும்புக்கு சென்ற புகையிரதம், ஒரு தனியார் நிறுவனம் முன்பதிவு செய்த சிறப்பு புகையிரதமாகும். புகையிரதம் அல்லது புகையிரத பெட்டியை ஒதுக்க ரயில்வே துணைப் பொது மேலாளர் (வணிகம்) அலுவலகத்திற்கு குறைந்தது 3 வாரங்களுக்கு முன்பாக எழுத்துப்பூர்வ கோரிக்கை அளிக்க வேண்டும். அந்த வகையிலேயே இதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இருப்பினும் இந்த சிறப்பு புகையிரததிற்கு கூடுதல் சேவைகள் எதுவும் வழங்கப்படவில்லை, பயணத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. மசாஜ் செய்ததில் பயணிகள் இருக்கைகள் எதுவும் சேதமடையவில்லை, எனவே இழப்பீடு இல்லை. மேலும், இப் புகையிரத பெட்டிகளை மசாஜ் சேவைக்குப் பயன்படுத்த அனுமதி அளிக்கவில்லை என்று புகையிரத திணைக்களம் உறுதிப்படுத்தியது.

ஆகவே, சமூகவலைதளங்களில் குறிப்பிட்டது போன்று இலங்கையில் புகையிரத திணைக்களத்தினால் புதிதாக மசாஜ் சேவை எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை என்பதையும் அப் பதிவுகள் உண்மைக்கு புறம்பானவை என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது. மேலும், காணொளியில் இடம்பெற்ற சம்பவம் உண்மையாக இருந்தாலும், அது வழக்கமான பயணிகள் புகையிரதத்தில் நடந்த சம்பவம் அல்ல, மாறாக சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட புகையிரதத்தில் நடந்த சம்பவம் என்பதையும் FactSeeker உறுதிப்பதுடுகிறது.

Latest updates

#Misleading

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

#Misleading

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

#FAKE

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

#FAKE

இலங்கை குறித்து இப்ராஹிம் ட்ரொரே கருத்து தெரிவித்தாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

Related Content

அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் பதவியில் இருந்து தம்மிக்க தசநாயக்கவே இராஜினாமா செய்தார்

மே 14, 2025

அதிகாரத்தை கைப்பற்றாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனாதிபதி நிதி வழங்காமல் இருக்க முடியுமா?

மே 6, 2025

தண்ணீரில் ஓடக்கூடிய கார் ஒன்றை பாடசாலை மாணவர் ஒருவர் உருவாக்கியதாக பகிரப்படும் போலிச்செய்தி

ஏப்ரல் 2, 2025

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் வீரகெட்டிய கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தல் நடாத்தப்பட்டதா?

மார்ச் 24, 2025

டில்வின் சில்வாவின் புகைப்படமென பகிரப்படும் தவறான புகைப்படம்

மார்ச் 20, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection