Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு

பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத்தின் நினைவுப்பரிசு முத்திரைகள்

Misleading
Misleading

பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் முகங்கள் கொண்ட முத்திரைகள் தனிப்பயனாக்க முத்திரைகள் என்பதையும் அவை நினைவு பரிசாக அஞ்சல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளதாகும்.

by Anonymous |

அக்டோபர் 10, 2024

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் முகங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

கடந்த ஒக்டோபர் 9 ஆம் திகதி சர்வதேச தபால் தினத்தை முன்னிட்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் முகங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்த செய்திகள் முக்கிய ஊடகங்களில் வெளியாகிருந்தாலும் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சயை ஏற்ப்படுத்தியுள்ளதால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.

இது தொடர்பில் ஆராய்த்தில், பிரதமர் அலுவலகத்தின் உத்தியயோகபூர்வ இணையதளத்தில் இது குறித்த செய்தி வெளியிட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. மேலும் பிரதமர் அம் முத்திரைகளை பெற்று கொள்ளும் புகைப்படங்களையும் காணக்கூடியதாக இருந்தது.

https://www.pmoffice.gov.lk/news.php?para=UkIvMksvcW4vV09uQXZGOXZsNjkra2dhdXdJUFJ0Nmo4MHExdjVLbU9teGM1MUsxdUFoaDhKbWNtNDdIVUdOMw==

மேலும், இது தொடர்பில் அஞ்சல் திணைக்களம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் உலக அஞ்சல் தினம் மற்றும் அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தின் 150 வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் முகங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள் தனிப்பயனாக்க முத்திரை வகையைச் சேர்ந்தவை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரியமாக, அஞ்சல் திணைக்களத்தின் சிறப்பு நிகழ்வுகளின் போது பிரதம அதிதிகளுக்கு தனிப்பயனாக்க முத்திரைகளை நினைவுப் பரிசாக வழங்குவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த முத்திரைகள் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத்தின் வேண்டுகோளின் பேரில் வெளியிடப்படவில்லை என்றும், தபால் திணைக்களத்தின் அன்பளிப்பாக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, உலக அஞ்சல் தினம் மற்றும் அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தின் 150 வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட தற்போதைய பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் முகங்கள் கொண்ட முத்திரைகள் தனிப்பயனாக்க முத்திரைகள் என்பதையும் அவை நினைவு பரிசாக அஞ்சல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளன என்பதையும் FactSeekers உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

நுகேகொடை பேரணியில் சாராயபோத்தல்கள் வழங்கப்பட்டதாக பகிரப்படுவது பழைய புகைப்படங்களாகும்

நவம்பர் 24, 2025

#Misleading

20,000 பொலிஸ் அதிகாரிகள் இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளதாக சாமர சம்பத் எம்.பி கூறிய கூற்று தவறானது

நவம்பர் 24, 2025

#AI generated

சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் நடிகை சாய் பல்லவியின் AI புகைப்படங்கள்

செப்டம்பர் 26, 2025

#fasle

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் டீசல் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னவின் கூற்று தவறானது

செப்டம்பர் 9, 2025

Related Content

நுகேகொடை பேரணியில் சாராயபோத்தல்கள் வழங்கப்பட்டதாக பகிரப்படுவது பழைய புகைப்படங்களாகும்

நவம்பர் 24, 2025

20,000 பொலிஸ் அதிகாரிகள் இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளதாக சாமர சம்பத் எம்.பி கூறிய கூற்று தவறானது

நவம்பர் 24, 2025

சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் நடிகை சாய் பல்லவியின் AI புகைப்படங்கள்

செப்டம்பர் 26, 2025

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் டீசல் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னவின் கூற்று தவறானது

செப்டம்பர் 9, 2025

ஊடகங்களையும் பொதுமக்களையும் தவறாக வழிநடத்தும் ‘ எல்ல – வெல்லவாய’ விபத்து தொடர்பான AI புகைப்படம்

செப்டம்பர் 8, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection