Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #factual

பாராளுமன்ற உறுப்பினர் டி.பி.சானக மூலமாக தவறாக சமூக மயப்படுதப்படும் கருத்து

Factual
Factual

பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம் என பிரதமரினால் சட்டம் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

by Anonymous |

மார்ச் 17, 2025

பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறிய நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரண்வல, ஹேனகம மத்திய மகா வித்தியாலயத்தின் விழாவில் கலந்து கொண்டது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டி.பி. சானக கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது கேள்வி எழுப்பியிருந்தார்.

பிரதமர் அப்போது பிறப்பித்த சட்டம் தற்போதும் நடைமுறையில் உள்ளதா அல்லது எதிர்கட்சிகளுக்கு மட்டுமா இந்த சட்டம் நடைமுரைப்படுத்தப்படுத்தப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் டி.பி. சானக கேள்வி எழுப்பியிருந்தார். இதனை மறுத்திருந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய தாம் இது குறித்து சட்டம் எதனையும் கொண்டுவரவில்லை எனவும், ஊடகங்கள் தவறாக செய்திகளை பிரசுரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இது தொடர்பில் சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

இதற்கு முன்பு பிரதமர் ஹரிணி அமரசூரிய இதுபோன்ற கருத்து வெளியிட்டுள்ளாரா என்பதை FactSeeker ஆராய்ந்ததில், இது குறித்து அவர் முன்பு கருத்து தெரிவித்திருந்த காணொளி ஒன்றை கண்டறிய முடிந்தது.

https://www.facebook.com/watch/?v=1973110526469774&rdid=HvK0e5iJwvpzvCvn

அந்தக் காணொளியில், “அவசியமில்லாமல் அரசியல்வாதிகளை பாடசாலை நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்த வேண்டாம்” என அவர் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் ஆராய்ந்த போது, பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்தியொன்றை அவதானிக்க முடிந்தது. அச் செய்தியில், அரசியல்வாதிகளை பாடசாலைகளுக்கு அழைத்து வருவதை நிறுத்துமாறும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டள்ளது.

ஆகவே பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம் என பிரதமரினால் சட்டம் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதையும், பாராளுமன்ற உறுப்பினர் டி.பி. சானக தவறுதலாக இதனை சமூகமயப்படுத்த முயற்சித்தார் என்பதையும் factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#false

மிஸ்டர் பீன் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 29, 2025

#Misleading

மாலினியின் இறுதிச் சடங்கில் நடிகர்கள் நடனமாடினார்களா?

மே 28, 2025

#Misleading

வெளிநாட்டு சுற்றுலாப்பயணி தாக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளி கடந்த ஆண்டு பெப்ரவரியில் பதிவானதாகும்

மே 27, 2025

Related Content

பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தெரு நாய்களை அகற்றும் முடிவு எடுக்கப்பட்டமை உண்மையே

ஏப்ரல் 4, 2025

Dialog Asiata பொதிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதா?

செப்டம்பர் 30, 2024

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection