Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு

பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான காணொளியே இப்போது பகிரப்படுகின்றது

Misleading
Misleading

இஸ்ரேல் -பாலஸ்தீன போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் அங்கு இடம்பெற்றுவரும் தாக்குதல்கள் குறித்து பல்வேறு செய்திகள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் என்பன சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

by Anonymous |

அக்டோபர் 10, 2023

இந்நிலையில் ஹமாஸ் இயக்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டதாகக் கூறும் காணொளியொன்று ட்விட்டர், முகப்புத்தக பக்கங்களில் பகிரப்பட்டு வருவதை factseekerஇனால் அவதானிக்க முடிந்தது.

இந்தக் காணொளியில் “ஹமாஸின் செய்தித் தொடர்பாளர்: ‘எங்களுக்கு ஆயுதங்கள், பணம் மற்றும் பிற உபகரணங்களை வழங்கிய ஈரானுக்கு நன்றி. அவர்கள் எங்களுக்கு சியோனிச கோட்டைகளை அழிக்க ஏவுகணைகளை வழங்கினர், மேலும் பல்வேறு செயற்பாடுகளுக்கு உதவினார்கள்’ பைடன் ஈரானுக்கு வழங்கிய 6 பில்லியன் டொலர்கள் நன்றாக செலவழிக்கப்படுவது போல் தெரிகிறது” என தெரிவிக்கும் பதிவுடன் பகிரப்படும் காணொளியின் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்ததில்,

இந்த காணொளியானது பல ஆண்டுகளுக்கு முன்னரே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக இந்தக் காணொளியை கூகுள் ரிவர்ஸ் (google reverse image search ) செய்து பார்த்ததில் கடந்த 2017ஆம் ஆண்டிலும், 2018ஆம் ஆண்டிலும் இதே காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளதை factseekerஇனால் அவதானிக்க முடிந்தது.

அவ்வாறு கடந்த 2018ஆம் ஆண்டில் youtube பக்கத்தில் பகிரப்பட்ட காணொளி இங்கே, https://www.youtube.com/watch?v=c40mv5lbPiE

முடிவு

ஆகவே தற்போது இடம்பெற்றுவரும் இஸ்ரேல் -பாலஸ்தீனப் போர் காலகட்டத்தில் பதிவாகிய காணொளியென சமூக வலைதளங்களில் பகிரப்படும் காணொளியானது பல ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட காணொளி என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

 

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

வரங்கனா கெகுலாவல லொத்தர் பரிசொன்றை வென்றார் என்ற செய்தி உண்மையே.

ஜூலை 8, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection