Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

நிகழ்நிலை காப்பு சட்டத்தை நீக்குவது உறுதியென அமைச்சர் விஜித கூறினாரா?

False
False

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு தடையாக இருக்கும் வாசகங்களை அகற்றி 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தை திருத்துதல் என்பதே தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

by Anonymous |

நவம்பர் 6, 2024

“நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை நீக்குவது உறுதி – அரசாங்கம்” என்ற தலைப்பில் செய்தியொன்று ‘வீரகேசரி’ மற்றும் ‘வெற்றி’ஆகிய செய்தி தளங்களில் வெளியாகியுள்ளதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

• https://www.virakesari.lk/article/198016
• https://www.facebook.com/photo?fbid=1023843923089679&set=a.808302004643873

வீரகேசரி இணைய தளத்தில் வெளியாகிய செய்தியில், “நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை நீக்கும் கொள்கையில் எமது அரசாங்கம் உறுதியாகவுள்ளது என  அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து FactSeeker ஆராய்ந்த போது, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத், நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த காணொளியை அவதானிக்க முடிந்தது.

காணொளி: https://youtu.be/rSKVi0s4irE?t=2590

அக் காணொளியில் நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு விஜித ஹேரத் பின்வருமாறு பதிலளித்தார்,

“நிகழ்நிலை காப்பு சட்டத்தை திருத்துவோம் என எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அடுத்த பாராளுமன்றம் கூடியவுடன் இந்த நடவடிக்கைகள் இடம்பெறும். எதிர்வரும் காலங்களில் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுப்போம். ஆனால்,இப்போது எமது கொள்கையுடன் நாம் இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், அமைச்சர் விஜித ஹேரத் கூறியபடி தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதா என ஆராய்ந்த போது, “சுதந்திரமான வெகுசன ஊடகத் தொழில்” என்ற தலைப்பின் கீழ் “கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு தடையாக இருக்கும் வாசகங்களை அகற்றி 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தை திருத்துதல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, நிகழ்நிலை காப்பு சட்டத்தை நீக்கும் கொள்கையில் எமது அரசாங்கம் உறுதியாகவுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்ததாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

ஷாருக்கான் முன் பயிற்சிக்காக கொழும்புக்கு வந்ததாக பகிரப்படும் புகைப்படம் AI ஆகும்.

ஜூலை 7, 2025

அண்டர்டேக்கர் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

ஜூன் 23, 2025

DIALOG இன் இலவச சலுகைகள் என பகிரப்படும் போலிச் செய்தி

ஜூன் 2, 2025

மிஸ்டர் பீன் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 29, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection